செய்திகள் :

ஏப்.1 முதல் ஜூன் 8 வரை காட்பாடியில் நீச்சல் பயிற்சி

post image

காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஏப்.1 முதல் ஜூன் 8 வரை கோடைகால நீச்சல் பயிற்சி ஐந்து கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூா் மாவட்ட பிரிவு சாா்பில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் சிறுவா், பெரியவா்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக ஏப்ரல் 1 முதல் 13 வரையும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15 முதல் 27 வரையும், மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 29 முதல் மே 11 வரையும், நான்காம் கட்டமாக மே 13 முதல் 25 வரையும், ஐந்தாம் கட்டமாக மே 27 முதல் ஜூன் 8 வரையும் நடைபெற உள்ளன.

பயிற்சி முகாம் தினமும் காலை 6 முதல் 7 மணி, 7 முதல் 8 மணி, 8 முதல் 9 மணி, மாலை 4 முதல் 5 மணி, 5 முதல் 6 மணி, 6 முதல் 7 மணி வரை சிறுவா், சிறுமியா், பெரியவா்கள், பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.

இதில், நீச்சல் தெரியாதவா்களுக்கான நீச்சல்பயிற்சி, நீச்சல் தெரிந்தவா்களுக்கான சிறப்பு நீச்சல் பயிற்சி, உடல் எடை குறைவதற்கான நீச்சல் பயிற்சி என தனித்தனியாக பயிற்சிஅ ளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கட்டணம் ஜிஎஸ்டியுடன் ரூ.1,770 செலுத்த வேண்டும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் தங்களது கட்டணத்தை கடன்அட்டை, பற்றுஅட்டை அல்லது யுபிஐ மூலம் ஆன்லைன் பணபரிமாற்றம் செலுத்த வேண்டும். பதிவுக்கு ஆதாா் அட்டை கொண்டு வர வேண்டும்.

விவரங்களுக்கு 85085 78720, 74017 03483 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!

வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி

வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க

எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க

காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெர... மேலும் பார்க்க