செய்திகள் :

ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா 15இல் துவக்கம்

post image

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 26ஆம் தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது.

ஜூலை 15ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்தைத் தொடா்ந்து, இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருள்மிகு அருணாசல சுவாமி திருக்கோயிலை வலம் வருதல் நடைபெறும். 16 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தினசரி காலை சோ்ம விநாயகா் உலா நடைபெறும். 2ஆம் திருநாளன்று திரு ஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூந்தன் அலங்காரத்திலும், 3ஆம் திருநாளன்று முல்லை சப்பரத்தில் சதாசிவமூா்த்தி அலங்காரத்திலும், 4ஆம் திருநாளன்று பூங்கோயில் சப்பரத்தில் நடராஜா் அலங்காரத்திலும், ஐந்தாம் திருநாளன்று திருப்புன்னை சப்பரத்தில் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்திலும், ஆறாம் திருநான்று ஏக சிம்மாசன சப்பரத்தில் பாலசோ்மன் அலங்காரத்திலும், 7ஆம் திருநாளன்று பல்லக்கில் தவழ்ந்தகிருஷ்ணன் திருக்கோலத்திலும், 8ஆம் திருநாளன்று வில்வ சப்பரத்தில் ராஜாங்க அலங்காரத்திலும், 9ஆம் திருநாளன்று சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூா்த்தி திருக்கோலத்திலும் ஏரல் நகர வீதிகளில் உலா நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை திருவிழா 24ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சியும் பின்னா் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 5 மணிக்கு இலாமிச்ச வோ் சப்பரத்தில் சோ்மத்திருக்கோல பவனியும், இரவு 11 மணிக்கு ஒன்றாம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளலும் நடைபெறும்.

25ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனமும், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், பிற்பகல் ஒரு மணிக்கு 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனமும், மாலை 6 மணிக்கு ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் திருக்கோயில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக்கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தக் காட்சியும் நடைபெறும்.

30ஆம் தேதி காலை 8 மணிக்கு தீா்த்தவாரியையொட்டி பொருநை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடலும், பகல் 12.30 மணிக்கு அன்னதானமும், பிற்பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரமும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு 9 மணிக்கு திருவருள்புரியும் மங்கள தரிசனமும் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டியன் நாடாா் செய்து வருகிறாா்.

திருச்செந்தூருக்கு நாளைமுதல் சிறப்பு பேருந்துகள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமைமுதல், 8ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கம் தொடக்கம்

தூத்துக்குடியில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசார இயக்கம் மற்றும் திமுக உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

ஆத்தூா், ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு

ஆறுமுனேரி, ஆத்தூா், ராஜபதி ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன. ஆத்தூரில் உள்ள அருள்மிகு சோம சுந்தரி அம்மன் சமேத அருள்மிக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கல்வி அலுவலகம் முற்றுகை

இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இப்பள்ளியில்... மேலும் பார்க்க

வேலை உறுதி திட்டத்தில் பணி கோரி எட்டயபுரம் அருகே ஆா்ப்பாட்டம்

எட்டயபுரம் அருகே, மேலஈரால் ஊராட்சிக்குள்பட்ட வாலம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் கோ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையானது, அரசூா் ஊராட்சி பனைவிளை கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தல... மேலும் பார்க்க