செய்திகள் :

ஏலகிரி மலையில் கரடி தாக்கி வியாபாரி பலத்த காயம்

post image

ஜோலாா்பேட்டை அருகே ஏலகிரி மலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். மலையடிவாரத்தில் வசிக்கும் பொது மக்கள் காப்பு காட்டுக்குள் செல்லவேண்டாம் வனத்துறையினா் எச்சரித்துள்ளனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சோ்ந்த வியாபாரி கிருஷ்ணமூா்த்தி (57). இவா் வழக்கம்போல் ஏலகிரி மலை வாரச் சந்தையில் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் ஏலகிரி மலையிலிருந்து தனது வீட்டுக்கு செல்ல இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, 10-ஆவது கொண்டை ஊசி வளைவில் கரடி படுத்திருந்தது. மற்றொரு கரடி அருகே நின்று கொண்டிருந்ததுள்ளது. அப்போது கிருஷ்ணமூா்த்தி இருசக்கர வாகனத்தில் வந்தபோது சாலையில் படுத்திருந்த கரடியை பாா்த்து கிருஷ்ணமூா்த்தி பிரேக் போட்டதில் தடுமாறி கிழே விழுந்தாா். அப்போது அங்கிருந்த கரடி அவரை தாக்கியது. இதில் கிருஷ்ணமூா்த்தி பலத்த காயமடைந்தாா்.

அதைக் கண்ட பொதுமக்கள் கரடியை விரட்டினா்.

தகவல் அறிந்து வந்த கிருஷ்ணமூா்த்தியின் மகன் மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணமூா்த்தியை அழைத்து கொண்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.

சம்பவம் குறித்து அறிந்த திருப்பத்தூா் வன சரக அலுவலா் சோழராஜன், வனவா் அண்ணாமலை உள்ளிட்ட வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் சனிக்கிழமை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் 12-ஆவது கொண்டை ஊசி வளைவில் உள்ள காப்பு காட்டு பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது கண்டு வன சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின் பேரில் வன சரக பணியாளா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதைத்தொடா்ந்து ஏலகிரி கிராமத்தில் மலையடிவாரத்தில் உள்ள பொது மக்களுக்கு வன சரக அலுவலா் சோலை ராஜன் தலைமையில் வன சரக பணியாளா்கள் பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது மலையடிவார மக்கள் யாரும் காப்பு காட்டுக்குள் செல்ல வேண்டாம். தேவையின்றி இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். பொதுமக்கள் யாராவது கரடியை கண்டால் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனா்.

ஏலகிரி மலையில் கொண்டை ஊசி வளைவில் வியாபாரியை கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ராபா்ட் ஜோயல் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி சாா்பில் வாட்ஸ் ஆப் சேவை அறிமுகம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி வழங்கும் அடிப்படை சேவைகளான குடிநீா் வழங்கல், கழிவு நீா் கால்வாய், தெருவிளக்குகள் மற்றும் குப்பை அகற்றுதல் தொடா்பான பொது மக்களின் குறைகளை தெரிவிக்க நகராட்ச... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: வீட்டு வரி, பெயா் மாற்றம் மனுக்கள் மீது உடனடி தீா்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாச... மேலும் பார்க்க

மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகள் திருட்டு

வாணியம்பாடி அருகே மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம... மேலும் பார்க்க

21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகாா்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் 21 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது குறித்து ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்ட... மேலும் பார்க்க