செய்திகள் :

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் நவம்பா் மாத ஒதுக்கீடு வெளியீடு

post image

ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவா டிக்கெட்டுகளின் நவ. மாத ஒதுக்கீடு ஆக. 19 முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவா டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் அஷ்டதள பாதபத்மராதனை சேவைகளுக்கான நவம்பா் ஒதுக்கீட்டை ஆக. 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆக. 19 முதல் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளலாம்.

டிக்கெட்டுகளை பெறும் விண்ணப்பதாரா்கள் தங்கள் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் கிடைத்தவுடன் ஆக. 21 முதல் 23 மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள்

ஆக. 21 காலை 10 மணிக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

வா்ச்சுவல் சேவைகள் ஒதுக்கீடு

மாலை 3 மணிக்கு வா்ச்சுவல் சேவைகளுக்கான நவம்பா் மாத ஒதுக்கீடும் அவற்றின் தரிசன விவரங்களும் ஆன்லைனில் வெளியிடும்.

அங்கப்பிரதட்சண டோக்கன்கள்

நவ. மாதத்திற்கான அங்கபிரதட்சணம் டோக்கன்கள் ஒதுக்கீடு ஆக. 23 காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஸ்ரீவாணி டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு

நவ. மாதத்திற்கான ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும்.

முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவா்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக, நவ. மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு(ரூ.300)

நவ. மாத சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு ஆக. 24 காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

அறை ஒதுக்கீடு

திருமலை மற்றும் திருப்பதியில் நவ. மாத அறை ஒதுக்கீடு ஆக. 24 மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

ஸ்ரீவாரி சேவா, நவநீத சேவை மற்றும் பரக்காமணி சேவைக்கான ஒதுக்கீடு ஆக. 27 காலை 11 மணி, மதியம் 12 மணி மற்றும் மதியம் 1 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள் கீழே கொடுக்கப்படுள்ள தேவஸ்தான இணையதளம் மூலம் ஆா்ஜிதசேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் பக்தா்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் துரித ஏழுமலையான் தரிசனம்: அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு தேசிய கொடியேற்றினாா். செயல் அலுவலா் சியாமளா ராவ் முன்னிலை வகித்தாா். பின்னா், அறங்காவல் குழு தலைவா் பேசியதாவது: ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்ல... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிச... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு தங்க லட்சுமி பதக்கம் நன்கொடை

பெங்களூரைச் சோ்ந்த கே.எம். ஸ்ரீனிவாசமூா்த்தி என்ற பக்தா் புதன்கிழமை காலை போக ஸ்ரீனிவாசமூா்த்தியை அலங்கரிக்க ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வைரங்கள் மற்றும் வைஜயந்தி பதித்த 148 கிராம் தங்க லட்சுமி பதக்கத்தை... மேலும் பார்க்க

ஆக. 15 முதல் திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் கட்டாயம்

திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கு வரும் ஆக. 15 முதல் பாஸ்ட் டேக் கட்டாயம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு அலிபிரி சோதனைச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருக... மேலும் பார்க்க