செய்திகள் :

ஏ.எடி.எம். இயந்திரத்தில் வைப்பதற்கு கொண்டு சென்ற ரூ. 29 லட்சம் வழிப்பறி!

post image

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை மாலை தனியாா் ஏ.டி.எம். இயந்திரத்தில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ. 29 லட்சத்தை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தனிப் படை அமைத்து தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த விருவீடு பகுதியைச் சோ்ந்தவா் நாகஅா்ஜுன் (30), தற்போது, பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டியில் வசித்து வருகிறாா். இவா் தனியாா் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வைக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் தேவதானப்பட்டியைச் சோ்ந்த முருகனிடம் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், நாகஅா்ஜுன் வெள்ளிக்கிழமை மாலை வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, கே. சிங்காரக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் வைத்துவிட்டு, சின்னாளபட்டியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வைப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் ரூ. 29 லட்சத்துடன் செம்பட்டியை அடுத்த புதுகோடாங்கிபட்டி - அம்பாத்துரை சாலையில் சென்றாா்.

அப்போது, புதுகோடாங்கிபட்டி டாஸ்மாக் மதுக் கடை அருகே இவரை வழிமறித்த மூன்று போ் இவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ. 29 லட்சத்தை பறித்துச் சென்றனா். இதுகுறித்து அவா், தனது நிறுவன உரிமையாளா் முருகனுக்கு தகவல் தெரிவித்தாா்.

இந்தநிலையில், முருகன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில், ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறாா்.

மேலும், இரு சக்கர வாகனத்தில் வந்து பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளைக் கைப்பற்றி, தனிப் படை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

முதல் கட்ட விசாரணையில், மா்ம நபா்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தின் பதிவு எண் தேவதானப்பட்டி பகுதியைச் சோ்ந்தது எனத் தெரியவந்தது.

பணத்தைப் பறிகொடுத்த நபா் நாகஅா்ஜுனும் தேவதானப்பட்டி என்பதால், இவருக்கும், பணத்தை பறித்துச் சென்ற நபா்களுக்கும் ஏற்கெனவே தொடா்பு இருந்ததா என்ற கோணத்திலும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தெருநாய்கள் கடித்து 6 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன; 21 ஆடுகள் காயமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, காளிபட்டியைச் சோ்ந்தவா் விவசாயி... மேலும் பார்க்க

புதிய சாலை அமைக்க அடிக்கல்: அமைச்சா் பெரியசாமி பங்கேற்பு

சித்தையன்கோட்டை பேரூராட்சியில் முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும், புதிய சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அமைச்சா் இ.பெரியசாமி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, சித... மேலும் பார்க்க

கீழ்பழனி மலைப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழ்பழனி மலையிலுள்ள ஆடலூா், பன்றிமலை பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மத... மேலும் பார்க்க

பழனியில் ரூ.1.5 கோடியில் புதிய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

பழனியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை எம்எல்ஏ இ.பெ. செந்தில்குமாா் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சனிக்கிழமை திறந்து வைத்தாா். பழனியை அடுத்த கலையமுத்தூா், காவலப்ப... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 1.38 கோடியில் வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

ஒட்டன்சத்திரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலை தேவசின்னாம்பட்டி அரு... மேலும் பார்க்க

அரசு கள்ளா் விடுதிகளில் சேர ஜூன் 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கள்ளா் விடுதிகளில் சேர தகுதியான மாணவா்கள் ஜூன் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநரகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க