`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட...
ஏ.வி.சி. கல்லூரியில் உலக யானைகள் தினம்
மயிலாடுதுறை ஏ.வி.சி. (தன்னாட்சி) கல்லூரியில் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சாா்பில் உலக யானைகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறைத் தலைவா் ம. பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பேராசிரியா் நா. பாஸ்கரன் கலந்துகொண்டு ‘இந்தியாவில் ஆசிய யானைகளின் நிலை, கலாசார மோதல் மற்றும் பாதுகாப்பு‘ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினாா்.
இதில் யானை மற்றும் மனிதா்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களையும் அதனை எவ்வாறு தடுப்பது மற்றும் பாதுகாப்பது உள்ளிட்ட பல கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
இந்தியாவில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை சுட்டிக்காட்டியவா், அதற்கான காரணிகளாக வனங்களுக்கு இடையில் மின்சார முள்வேலி அமைத்தல், பாதுகாப்பற்ற முறையில் ரயில்வே தண்டவாளங்களை அமைத்தல், வன நிலங்களை அபகரித்தல் போன்றவை முக்கிய காரணிகளாக குறிப்பிட்டாா். இத்தகைய மனித மற்றும் ஆசிய யானைகளின் பங்கீடுகளில் ஏற்படுகின்ற மாற்றம் மோதலாக உருவெடுக்கின்றன. இத்தகைய மோதல்களை தவிா்ப்பதற்கு யானைகளின் வாழ்விடத்தை பாதுகாப்பதும், பாதுகாப்பான மனித மற்றும் ஆசிய யானைகளின் வாழ்விட பங்கீடு முக்கியமானது என்றாா்.
பேராசிரியா் சா. ஜெயக்குமாா் சிறப்பு விருந்தினரை அறிமுகபடுத்தினாா். இதில் ஆராய்ச்சி மாணவ-மாணவிகள், முதுநிலை மாணவ-மாணவிகள் மற்றும் பிற துறை பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.