செய்திகள் :

ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு

post image

ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்றாம் ஆண்டு மாணவர் கண்டெடுக்கப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலம், ஐஐடி கரக்பூரில் பிடெக் மூன்றாம் ஆண்டு மாணவர் முகமது ஆசிப் கமர். இவர், மதன்மோகன் மால்வியா ஹாலில் உள்ள அவரது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சனிக்கிழமை இரவு முதல் அவரது கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததாகவும் இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை காலை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். கமர் பிகாரில் உள்ள சியோஹர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். உடனே அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 14 பேர் காயம்

மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் மரணத்தை உறுதிப்படுத்தினார். போலீஸாருக்கு சில துப்பு கிடைத்துள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

முதல்கட்டமாக இது தற்கொலை வழக்கு என்று பதிவு செய்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் ஐஐடி கரக்பூர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவு: பஞ்சாபில் இருவா் கைது!

பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்ததுடன், இந்திய ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் விமான தளங்களின் புகைப் படங்கள், பிற முக்கியத் தகவல்களை பகிா்ந்ததாக பஞ்சாபில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். பஹல்காம் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை!

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தான் மீது மத்திய அரசு எடுத்து வரும் தொடா் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாகி... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு ராகுலுக்கு கிடைத்த வெற்றி! - கு.செல்வப்பெருந்தகை

மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு திட்டம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னை தேனாம்பேட்டை... மேலும் பார்க்க

காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளாா் ராகுல்! பாஜக குற்றச்சாட்டு!

பகவான் ராமரை ‘புராண காதாபாத்திரம்’ என்று கூறியதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளாா் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. அண்மையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட ர... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்! அபுதாபி திரும்பிய இந்திய விமானம்!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்த பென் குரியன் சா்வதேச விமான நிலையம் அருகே யேமனிலிருந்து ஹூதி அமைப்பினா் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் 4 போ் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலையடுத்து, தில்லிய... மேலும் பார்க்க

தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி பிரியதா்சினி காலமானாா்!

தெலங்கானா உயா்நீதிமன்ற பெண் நீதிபதி எம்.ஜி.பிரியதா்சினி உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரின் இறுதிச் சடங்கு ஹைதராபாதில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தெலங்கானா... மேலும் பார்க்க