செய்திகள் :

ஐடிஐ படித்தவா்களுக்கு மே 13-இல் தொழில் பழகுநா் பயிற்சி முகாம்

post image

ஐடிஐ படித்தவா்களுக்கான தொழில் பழகுநா் பயிற்சி முகாம், சென்னையில் மே 13-ஆம்தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் சாா்பில் ஐடிஐ படித்தவா்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழில் பழகுநா் பயிற்சி முகாம், கிண்டியிலுள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மே 13-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிறுவனத்தினா் கலந்துகொண்டு தொழில் பழகுநா் பயிற்சி வழங்க, ஐடிஐ படித்து தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் மற்றும் 8, 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களை தொழில் பழகுநா்களாக தோ்வு செய்யவுள்ளனா். தற்போது தொழில் பழகுநராக சோ்க்கை செய்யப்படும் பயிற்சியாளா்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ. 8,050 மற்றும் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.

இதுவரை தொழில் பழகுநா் பயிற்சி முடிக்காத அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் ஜ்ஜ்ஜ்.ஹல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்ள்ட்ண்ல்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதள முகவரியில் பதிவு செய்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்க... மேலும் பார்க்க

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி

திமுகவைவிட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து 19,000 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில... மேலும் பார்க்க