செய்திகள் :

ஐபிஎல் கூட்ட நெரிசல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு காவல் ஆணையருக்கு மீண்டும் பணி! கர்நாடக அரசு உத்தரவு

post image

பெங்களூரு காவல் ஆணையரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பாராட்ட பெங்களூரில் கடந்த ஜூன் 4-ஆம் தேதி வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பெருங்கூட்டம் திரண்டது. அதில் இளம் பருவ ஆண், பெண்களே அதிகம்.

முறையான திட்டமிடலின்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் உண்டானது. அதில் 11 உயிர்கள் பறிபோயின. இந்தச் சம்பவம் நாடெங்கிலும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, பெங்களூரு காவல் ஆணையர் உள்பட முக்கிய அதிகாரிகள் சிலர் பனியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

இந்தநிலையில், பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தாவை பணியிடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) திரும்பப் பெற்றுள்ளது. அவருடன் சேர்த்து காவல் துறை துணை ஆணையர் ஷேகர் எச். தெக்கனவர் (ஐபிஎஸ்), உதவி ஆணையர் சி. பாலகிருஷ்ணா, காவல் ஆய்வாளர் கே. கிரீஷ் என மொத்தம் நான்கு காவல் துறை அதிகாரிகளின் சஸ்பெண்ட் உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில், ஓய்வுபெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் மாநில அரசின் உத்தரவின்கீழ் விசாரணையை நடத்தியது.

அந்த ஆணையம் விசாரணையை நிறைவு செய்துவிட்டதாகவும், விரிவானதொரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கண்ட அதிகாரிகளும் தங்கள் பணியிடைநீக்கம் உத்தரவை ரத்து செய்ய கேட்டுக்கொண்டுள்ளனர். இவற்றின் அடிப்படையில், அவர்கள் தங்களது பணியில் உடனடியாக இணைய உத்தரவிடப்படுகிறது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Bengaluru police commissioner suspension has been revoked by the Karnataka government

விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் சௌஹான்

வேளாண் துறையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.விவசாயிகளின் வ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:சொந்த வருவாய்க்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு உதவும் மத்திய திட்டங்கள... மேலும் பார்க்க

"ஆபரேஷன் சிந்தூர்': இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்துக்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அத... மேலும் பார்க்க

புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் மேக்நாத் தேசாய் காலமானாா்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த புகழ்பெற்ற பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) செவ்வாய்க்கிழமை காலமானாா்.உடல்நல பாதிப்பு காரணமாக ஹரியாணா மாநிலம் கு... மேலும் பார்க்க

இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசாா்’ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது... மேலும் பார்க்க

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்த... மேலும் பார்க்க