செய்திகள் :

ஒடிசாவில் 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலி!

post image

ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியாகியுள்ளனர்.

ஒடிசாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியானதாக அம்மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சுரேஷ் புஜாரி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2020-21 வரையிலான காலத்தில் 339 பேரும், 2021-22 இல் 296 பேரும், 2022-23 இல் 306 பேரும், 2023-24 இல் 272 பேரும் மற்றும் 2024-25 இல் 205 பேரும் மின்னல் பாய்ந்து பலியானதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், ஒடிசா மாநிலத்தில் அதிகப்படியாக மின்னல் பாய்ந்து பலியானவர்களில் மயூர்பஞ்ச் மாவட்டம் -134(பலி எண்ணிக்கை) முதலிடத்திலும் அதற்கு அடுத்தப்படியாக பாலாசோர்-110, கஞ்சம்-104 மற்றும் கியோஜார்-100 ஆகிய மாவட்டங்கள் உள்ளதென பலி எண்ணிக்கை பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், அம்மாநிலத்தின் பௌத் மாவட்டம்-11 கடைசி இடத்திலுள்ளது.

இந்நிலையில், இயற்கையாகவே பனை மரங்கள் மின்னலைக் கடத்தி மக்களைக் காப்பாற்றக் கூடும் என்பதினால் 23 லட்சம் பனை மரங்களை ஒடிசா மாநிலம் முழுவதும் நடுவதற்காக வனத் துறைக்கு ரூ.7.59 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் அதில் 51 வனப்பகுதி மண்டலங்களில் தற்போது 19 லட்சம் பனை மரங்கள் நடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு ஒடிசா மாநில அரசு மின்னலை மாநிலத்தின் பேரிடராக அறிவித்திருந்தது.

மாநில பேரிடர் மீட்பு நிதி வழிகாட்டுதலின் படி மின்னல் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிரிட்டன் - இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவான படத்தை வெளியிட தணிக்கை வாரியம் தடை!

வடக்கு காஸா மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் ஸ்தெரோத் நகரத்தின் மீதும் அதன் அருகிலுள்ள விவசாயப் பக... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: 35 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய பாகிஸ்தான்!

மியான்மர் நாட்டில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 35 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை பாகிஸ்தான் அரசு அனுப்பியுள்ளது. மியான்மரில் கடந்த மார்ச் 28 அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் யேமன் நகரங்கள்!

யேமன் நாட்டின் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.யேமனின் வடக்கு சனா மற்றும் சதா மாகாணங்களின் மீது அமெரிக்க கடந்த சில மணி நேரங்களில் மட்டும... மேலும் பார்க்க

தாயகம் திரும்பிய 8.79 லட்சம் ஆப்கன் மக்கள்! எஞ்சியவர்களை நாடு கடத்தும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானிலிருந்து அப்கான் அகதிகளை தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் பணி துவங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் ஆப்கன் குடியுரிமை அட்டை... மேலும் பார்க்க

மலேசியா எரிவாயு குழாய் வெடி விபத்து: 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மலேசியா நாட்டில் எரிவாயு குழாய் வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மிகப் பெரிய நகரமான கோலாலம்பூரின் புத்ரா பகுதியில் இன்று (ஏப் 1) காலை 8.10... மேலும் பார்க்க

செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி?

செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி? என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.இணைதளவுலகில் எங்கும் ‘ஜிப்லி’மயமாக அலைவீசிக் கொண்டிருக்கிறது. சின்னச்சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும... மேலும் பார்க்க