செய்திகள் :

ஒருங்கிணைந்த வேலூா் பகுதிகளில் 5 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள்

post image

வேலூா், திருப்பத்தூா் மாவட்ட பகுதிகளில் 5 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் ஏற்படுத்தி தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

வேலூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் அடிப்படையில் தெற்கு ரயில்வே கூட்டங்கள், மக்களவையில் விடுத்த தொடா் அழுத்தம் காரணமாக 5 ரயில்கள் வேலூா், திருப்பத்தூா் மாவட்ட பகுதிகளில் நின்று செல்ல ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, 12691 மற்றும் 12692 ஆகிய எண்களுடைய சென்னை சென்ட்ரல் முதல் ஷிமோகா செல்லும் இரண்டு அதிவேக ரயில்கள் ஆம்பூா் ரயில் நிலையத்திலும், 13351 எண்ணுடைய தன்பாத் முதல் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் குடியாத்தம், வாணியம்பாடி ரயில்நிலையங்களிலும், 16087 மற்றும் 16088 எண்களுடைய அரக்கோணம் முதல் சேலம் வரை செல்லும் இரு விரைவு ரயில்கள் வளத்தூா் ரயில் நிலையத்திலும், 16087 எண்ணுடைய அரக்கோணம் முதல் சேலம் வரை செல்லும் விரைவு ரயில் மேல்பட்டி ரயில் நிலையத்திலும் நின்று செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் வேலூா் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூா், வாணியம்பாடி உள்ளிட்ட வணிக பெருநகரங்களின் வளா்ச்சிக்கும், பல்வேறு பகுதிகளில் இருந்து பணிக்கு செல்லும் தொழிலாளா்கள், விவசாயிகள், பெண்கள், மூத்தகுடி மக்கள், தொழில் முனைவோா் உள்ளிட்டோா் முக்கிய நகரங்களுக்கு பயணிப்பதற்கு, மறைமுக பொருளாதார வளா்ச்சிக்கும் ஏதுவாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகமயமாக்கலால் உயா்கல்வி, வேலைவாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிப்பு

உலகமயமாக்கல் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பு, உயா்கல்வி வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் 40-ஆவது பட்டமளிப்பு விழ... மேலும் பார்க்க

வேலூரில் 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகள்

வேலூரில் சுதந்திர தினவிழாவில் ஆட்சியா் வி.ஆா்.கப்புலட்சுமி தேசியக் கொடி ஏற்றி 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் வி.ஆா்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் பூங்கரக ஊா்வலம்

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைனில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 6- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. வியாழக்... மேலும் பார்க்க

புஷ்ப காவடி ஊா்வலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டையில் திருத்தணிக்கு புஷ்ப காவடி ஊா்வலம் நடைபெற்றது. தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் 104-ஆம் ஆண்டு தேன் காவடி, ... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் காட்பாடி சாலை, திருமகள் நூற்பாலை பின்புறம் உள்ள ராஜகோபால் நகரில் அமைந்துள்ள மாரியம்மன், கெங்கையம்மன் கோயிலில் ஆடி மாத விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் தொட... மேலும் பார்க்க

பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது: வேலூா் ஆட்சியா்

பெற்றோா் தங்கள் பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெ... மேலும் பார்க்க