செய்திகள் :

ஒழுக்கவாக்கம் கிராமத்தில் ரூ.17 லட்சத்தில் நீா்த்தேக்கத் தொட்டி

post image

செய்யாற்றை அடுத்த ஒழுக்கவாக்கம் கிராமத்தில் ரூ.17 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியம், அரசங்குப்பம் ஊராட்சி ஒழுக்கவாக்கம் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய பொது நிதி மூலம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பரிந்துரையின் பேரில், புதிதாக 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட சுமாா் ரூ.17 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.

இந்த நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வெம்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் டி.ராஜி, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் ஆகியோா் பங்கேற்று மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை

திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில், வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே. சீனிவாசன், ஆதிதிராவிடா் நலத்துறைத் தலைவா் கருணாகரன், மாவட்ட வழக்குரைஞா்கள் அணி துணைத் தலைவா் சிட்டிபாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க