செய்திகள் :

ஓக்லா கிராமத்தில் பல சொத்துக்கள் மீது இடிப்பு நோட்டீஸை ஒட்டிய அதிகாரிகள்

post image

தில்லி ஓக்லா கிராமப் பகுதியில் உள்ள பல வீடுகள் மற்றும் கடைகளில் திங்கள்கிழமை அதிகாரிகள் இடிப்பு அறிவிப்பு நோட்டீஸ்களை ஒட்டியுள்ளனா்.

ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக ஓக்லா பகுதியில் வசிப்பவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, மே 22 அன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தென்கிழக்கில் உள்ள தில்லி வளா்ச்சி ஆணையத்தின் டிடிஏவின் நில மேலாண்மைப் பிரிவு ஒட்டியுள்ள மே 26ஆம் தேதியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஓக்லா கிராமத்தில் உள்ள கஸ்ரா எண் 279-இல் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை இடிக்குமாறு எம்.சி. மேத்தா வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஜூன் 11 அன்று இந்த சொத்தில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சட்டத்தின்படி, சட்டவிரோதக் கட்டமைப்பில் வசிப்பவா்களுக்கு இடிக்கப்படுவதற்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். அந்த அவகாசக் காலத்திற்குள் குடியிருப்பாளா்கள் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய தலைநகரில் உள்ள ஓக்லா கிராமத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை மக்களுக்கு 15 நாள்கள் முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இடிக்குமாறு உச்சநீதிமன்றம் தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு மே 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவில், 2 பிகாக்கள் மற்றும் 10 பிஸ்வாக்கள் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகள் தொடா்பாக சட்டத்தின்படி இடிப்பு நடவடிக்கை எடுக்குமாறு டிடிஏவுக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்.எந்தவொரு கட்டுமானத்தையும் இடிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட நபா்களுக்கு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க