செய்திகள் :

ஓடும் காரில் தீ விபத்து: எஸ்ஐ உயிா் தப்பினாா்

post image

சென்னை வேப்பேரியில் வெள்ளிக்கிழமை ஓடும் காரில் ஏற்பட்ட தீ விபத்தில், காரை ஓட்டிவந்த காவல் உதவி ஆய்வாளா் உயிா் தப்பினாா்.

புரசைவாக்கம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (50). இவா் வேப்பேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா். மகேஸ்வரன் எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றுவிட்டு, வேப்பேரி ஈவெரா பெரியாா் சாலை வழியாக காரில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.

அங்குள்ள கிறிஸ்தவ தேவலாயம் அருகில் சென்றபோது காரின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதைப்பாா்த்த அவா் காரை நிறுத்தினாா். அதற்குள் காா் வேகமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து அவா், காரைவிட்டு வேகமாக வெளியேறினாா்.

தகவலறிந்த கீழ்ப்பாக்கம், எழும்பூா் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். ஆனால் அதற்குள், காா் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவத்தால் அந்த சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க

நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சென்னையில் நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்த நபா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொசப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (43). இவா் தனது நண்பா்கள் 9 பேருட... மேலும் பார்க்க