செய்திகள் :

ஓடும் பேருந்திலிருந்து குழந்தை தவறிவிழுந்து பலி: ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

post image

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓடும் பேருந்திலிருந்து 9 மாதக் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் முத்தம்பள்ளி கரங்களூர் பகுதியைச் சேர்ந்த ராஜதுறை - முத்துலட்சுமி தம்பதியின் மகன், நபீஸ் என்ற 9 மாத ஆண் குழந்தை நேற்று முன்தினம் இரவு சங்ககிரி அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த போது ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.

இது தொடர்பாக தேவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் சிவன் மணி மற்றும் நடத்துநர் பழனிசாமி ஆகிய இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொறியியல் கலந்தாய்வு: 1.39 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2025-2026) பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான கலந்தாய்வுக்கு கடந்த 8 நாள்களில் 1.39 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறி... மேலும் பார்க்க

சூழல் சாா் சிகிச்சை வழிகாட்டுதல்களை வகுக்க முடிவு: மத்திய சுகாதார அறிவியலாளா் சன்சல் கோயல்

இந்தியாவில் சூழலுக்கேற்ப மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறை அறிவியலாளா் டாக்டா் சன்சல் கோயல் தெரிவித்தாா். போரூா்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: தமிழக பாஜக பேரணி

பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சாா்பில் புதன்கிழமை மூவா்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது. தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா்கள் தமிழிசை ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடந்ததாக சவுக்கு சங்கா் வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக யூ டியூபா் சவுக்கு சங்கா் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தர... மேலும் பார்க்க

ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி பதிவு செய்தது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொ... மேலும் பார்க்க