செய்திகள் :

ஓபன் ஏஐ என்ன விலை?: எலான் மஸ்க்

post image

ஓபன் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

செயல் நுண்ணறிவு தளம் சாட் ஜிபிடி-யின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-யை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளை எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு மேற்கொண்டதாக எலான் மஸ்க் தரப்பு வழக்குரைஞர் உறுதி செய்துள்ளார்.

ஓபன் ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலருக்கோ (ரூ. 8.45 லட்சம் கோடி) அதனைவிட கூடுதல் விலைக்கோ வாங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எலான் மஸ்க் குழு மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பிரதமர் வாழ்த்து!

இருப்பினும், ஓபன் ஏஐ விற்பனை குறித்த எலான் மஸ்க்கின் கோரிக்கைக்கு ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்தை வேண்டுமானால் 9.74 பில்லியனுக்கு வாங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஓபன் ஏஐ நிறுவனம் நிறுவப்பட்டபோது, எலான் மஸ்க்கும் அதன் இணை நிறுவனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லாப நோக்கற்ற ஓபன் ஏஐ நிறுவனம், லாபத்தை நோக்கிச் செல்வதாகவும் கூறியதுடன், நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் தன்னிடம்தான் இருக்க வேண்டும் கூறிய எலான் மஸ்க், பின்னாளில் நிறுவனத்திலிருந்து விலகினார்.

இருப்பினும், லாபம் சார்ந்த நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு எலான் மஸ்க் முன்னதாகவே சம்மதம் தெரிவித்ததாகவும் ஓபன் ஏஐ கூறியது.

பிரிட்டன்: சட்டவிரோதமாகக் குடியேறிய 609 பேர் கைது!

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளநிலையில், பிரிட்டனும் அதற்கேற்றவாறு நாடுகடத்தும் பணியில் தீவிரமாக உள்ளது. பிரிட்டனில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களால் ... மேலும் பார்க்க

எஸ்டோனியா அதிபருடன் பிரதமர் சந்திப்பு!

பாரிஸ் : பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெறும் செய்யறிவு செயல்திறன் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எஸ்டோனியா நாட்டின் அதிபர் அலர் காரிஸுடன் உரையாடினார். இருநாட்டுத் தலைவர்க... மேலும் பார்க்க

டிரம்ப்பின் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம்!

அமெரிக்காவில் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இ... மேலும் பார்க்க

மீண்டும் பிளாஸ்டிக்: ‘பேப்பர் ஸ்ட்ரா’ வேலைக்காகாது! -டிரம்ப் அதிரடி!

அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பட்டை அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஊக்குவிக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி, அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அவர் உத்தரவிட்... மேலும் பார்க்க

தீவிர வானிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்!

தீவிர காலநிலை மாற்றத்தால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் கூறுகிறது.தீவிர காலநிலை மாற்றத்தால் நீண்டகால கர்ப்பத்துக்கு பெண்கள் ஆளாவதாக ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெர... மேலும் பார்க்க

செய்யறிவு அனைவருக்குமானதாக மாற வேண்டும்: பிரதமர் மோடி

செய்யறிவு ஏற்கனவே, நமது கொள்கைகள், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை வடிவமைக்கத் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே, செய்யறிவு அனைவருக்குமானதாக மாற வேண்டும் என்று அவர் வலியுறு... மேலும் பார்க்க