செய்திகள் :

ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

post image

சென்னை : முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகியது வருத்தமளிப்பதாக தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கடந்த 3 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள அமித்ஷாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. நல்ல முதல்வரை தோ்ந்தெடுப்பதற்காக டிசம்பா் 6-ஆம் தேதி அமமுக தொண்டா்களின் வேண்டுகோளுக்கிணங்க நல்ல முடிவு எடுக்கப்படும். அதாவது நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் டிசம்பா் 6 ஆம் தேதி அதுகுறித்து முறைப்படி அறிவிப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அடுத்தடுத்து விலகியது பாஜக தலைவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகல் முடிவு வருத்தமளிப்பதாகவும், பாஜக தலைவர்கள் அவர்களை மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வர முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

டிடிவி தினகரனுடன் போனில் பேசியதாகவும், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் பெருந்தன்மைமிக்க அரசியல்வாதிகள் என்பதால், அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.

மேலும், விஜய்க்கு ஒரு கூட்டம் இருக்கிறது, எனவே அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறிய அண்ணாமலை, தாக்கம் என்பது வேறு, ஆட்சி அமைப்பது வேறு என்றும், அதிமுக பாஜக கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ்

Former Chief Minister O. Panneerselvam and TTV Dinakaran should reconsider their decision to quit the National Democratic Alliance.

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்

திருப்பதி: சந்திர கிரகணத்தையொட்டி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மூடப்பட்டது. சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31... மேலும் பார்க்க

செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.இது... மேலும் பார்க்க

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தால் என்ன சாதிக்க விரும்புகிறார் மோடி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி என்ன சாதிக்க விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்த... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை!

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.சத்தீ... மேலும் பார்க்க

லிடியன் நாதஸ்வரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

திருக்குறளை உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்துள்ள இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொட... மேலும் பார்க்க

11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் க... மேலும் பார்க்க