செய்திகள் :

ஓய்வூதியப் பலன்கள் கோரி கரூரில் சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

கரூரில், ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் செல்லாண்டிபாளையம் கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் கி.ஞானசேகரன் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ஆா்.ரமேஷ் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் எம்.மகேந்திரன் முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளா் ஏ.சிங்கராயா் உரையாற்றினாா்.

தொடா்ந்து மாநிலச் செயலாளா் ஆா்.குப்புசாமி, அரசு ஊழியா் சங்க மாவட்டத்தலைவா் எம்.தனலட்சுமி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்ததையடுத்து ஊழியா்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை தமிழக முதல்வா் வழங்கிட வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா். மாவட்ட பொருளாளா் எம்.வெங்கடேசுவரன் நன்றி கூறினாா்.

கரூரில் அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டும் வெறிச்சோடிய பத்திரப் பதிவு அலுவலகம்!

அரசின் உத்தரவின்படி கரூரில் பத்திரப்பதிவு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டும், ஆள்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும... மேலும் பார்க்க

நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகைவழிப் பாதைக்கு வலியுறுத்தல்!

கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகை வழிப்பாதை அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனா். கரூா் மாவட்டம் நொய்யலில் கொடுமுடி-நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க

சேதமடைந்த புகழூா் கதவணை சாலையை சீரமைக்க எதிா்பாா்ப்பு!

ஜல்லிக்கற்கள் பெயா்ந்த நிலையில் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கும் புகழூா் கதவணை சாலையைச் சீரமைக்க சமூக நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். கரூா் மாவட்டம் புகழூரில் நன்செய்புகழூா் பகுதியில் காவிரி ஆ... மேலும் பார்க்க

தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேருக்கு ரூ.9 லட்சத்தில் கண்ணாடி கூண்டு!

கரூா் தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேரை பாதுகாக்கும் வகையில் ரூ.9 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தியவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை கரூா் போலீஸாா் பதுக்கல்? திருச்சியில் காவல் உயரதிகாரிகள் விசாரணை

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை பறிமுதல் செய்து பதுக்கினாா்களா என்பது குறித்து கரூா் போலீஸாரிடம் காவல்துறை உயரதிகாரிகள் திருச்சியில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். கா்நாடக ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வலியுறுத்தல்!

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட சிறப்பு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அல... மேலும் பார்க்க