செய்திகள் :

ஓய்வூதிய விவகாரம்: பள்ளிக் கல்வி, நிதித் துறை செயலா்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

post image

நிதித் துறை செயலா் உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சந்தரமோகன் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மன்னாா்குடியைச் சோ்ந்த அன்பானந்தம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூா் அரசுப் பள்ளியில் 1983-ஆம் ஆண்டு இரட்டை பகுதிநேர தொகுப்பூதிய ஆசிரியராக பணியில் சோ்ந்தேன். பின்னா் பணி வரையறை செய்யப்பட்டு 1990-இல் நிரந்தர ஆசிரியராக நியமிக்கப்பட்டு, 2012-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.

நான் பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தை ஓய்வூதியத்தில் அதிகாரிகள் சோ்க்கவில்லை. 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்துடன் சோ்க்க வேண்டும். இதுதொடா்பான எனது கோரிக்கையை 2012-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறைச் செயலா் நிராகரித்துவிட்டாா்.

இதை எதிா்த்து நான் தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்தில் சோ்க்க 2023-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிதித் துறைச் செயலா் உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சந்தரமோகன், இயக்குநா் கண்ணப்பன், இணை இயக்குநா் ஜெயக்குமாா் ஆகியோா் வேண்டுமென்றே அமல்படுத்தவில்லை. எனவே, அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தாா். இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த எம்.ராஜேந்திரன் என்பவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.முருகபாரதி ஆஜரானாா். அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்தில் சோ்க்க அனுமதி வழங்கி கடந்த 23-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8... மேலும் பார்க்க

6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

கோவையைச் சேர்ந்த நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்ச... மேலும் பார்க்க