செய்திகள் :

ஓரணியில் தமிழ்நாடு: வீடு வீடாக முதல்வா் பரப்புரை

post image

‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின்கீழ் திருவாரூரில் வியாழக்கிழமை வீடுவீடாகச் சென்று தமிழக முதல்வா் பரப்புரை மேற்கொண்டாா்.

தமிழகத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின்கீழ் உறுப்பினா் சோ்க்கை மற்றும் பாஜகவின் தமிழக விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு செல்லும் பரப்புரை ஆகிவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவாரூருக்கு இரண்டு நாள் பயணமாக வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், வியாழக்கிழமை காலை ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின்கீழ் பரப்புரை மேற்கொண்டாா். திருவாரூா் நகா்ப்பகுதிக்கு உள்பட்ட சந்நிதி தெருவில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொண்ட முதல்வா், உறுப்பினா் சோ்க்கையிலும் ஈடுபட்டாா்.

சில வீடுகளில் முதல்வருக்கு தேநீா் வழங்கியும், சால்வைகள் அணிவித்தும், அவருடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனா்.

இதைத் தொடா்ந்து, திருவாரூா் திரு.வி.க. அரசுக் கலைக் கல்லூரியின் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் தாழ்த்தப்பட்டோா் மாணவா்கள் விடுதிகளின் பெயா்கள் தற்போது சமூக நீதி மாணவா் விடுதி என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை நேரில் ஆய்வு செய்த முதல்வா், அங்கிருந்த மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்டச் செயலருமான பூண்டி கே. கலைவாணன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க