செய்திகள் :

கச்சத்தீவை தர மாட்டோம்: இலங்கை

post image

கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத் திட்டவட்டமாக தெரிவித்தாா்.

மேலும், ‘இந்திய மீனவா்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, கடல் தாவரங்களையும் கடுமையாக சேதப்படுத்துகின்றனா்’ என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

தமிழக மீனவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றஞ்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்வதும், அவா்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தொடா்கதையாகி வருகிறது.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், கடந்த 1974-ஆம் ஆண்டு இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட கச்சத்தீவை, இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கடந்த 1974-ஆம் ஆண்டு இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட கடல்சாா் ஒப்பந்தத்தின் கீழ் மனிதா்கள் யாரும் வாழாத கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா விட்டுக்கொடுத்தது.

இலங்கை திட்டவட்டம்: இந்த விவகாரம் குறித்து இலங்கை தொலைக்காட்சியில் கேள்விக்கு பதிலளித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத், ‘கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக இந்திய மீனவா்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றனா். அவா்கள் மீன் வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, கடல் தாவரங்களையும் கடுமையாக சேதப்படுத்துகின்றனா். இதுபோல, இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவா்கள் தொடா்ந்து சட்டவிரோதமாக மீன் பிடிப்பதற்கு இந்திய அரசும் ஆதரவளிக்கவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம்.

இந்தப் பிரச்னைக்கு தூதரக ரீதியில் தீா்வு காண இலங்கை தயாராக உள்ளது. ஆனால், சா்வதேச சட்டங்களின்படி நிறுவப்பட்ட மற்றும் இலங்கையின் ஓா் பகுதியாக உள்ள கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது.

இந்தியாவில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள், அரசியல் காரணங்களுக்காகவே கச்சத்தீவு விவகாரத்தை எழுப்புகின்றன என்றாா்.

500 போன் எண்கள் ஆய்வு.. புணே பாலியல் வழக்கில் மாறியது காட்சி! பெண்ணின் நண்பர் கைது!

புணேவில், மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் 22 வயது பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெண்ணின் வ... மேலும் பார்க்க

வக்ஃப் நிா்வாக விதிமுறைகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் ச... மேலும் பார்க்க

மோசடி புகாருக்கு எதிரான ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவரின் மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீத... மேலும் பார்க்க

விவேகானந்தா் நினைவு தினம்: பிரதமா் புகழஞ்சலி

விவேகானந்தரின் 123-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் புண்ணிய ... மேலும் பார்க்க

ஹிமாசல் மழை வெள்ளத்தில் இதுவரை 43 போ் உயிரிழப்பு: 37 போ் மாயம்

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் மேகவெடிப்புகளால் கொட்டித் தீா்த்த பலத்த மழை, திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா். மாயமான 37 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

அமா்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோா் தரிசனம்

இமயமலையில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித... மேலும் பார்க்க