செய்திகள் :

கஞ்சா சாக்லேட் விற்பனை: பிகாரைச் சோ்ந்தவா் கைது

post image

சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்ாக பிகாரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

ராயப்பேட்டை பெரோஸ் தெருவில் கஞ்சா சாக்லேட் விற்கப்படுவதாக சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கும், ஜாம் பஜாா் போலீஸாருக்கும் ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீஸாா், அங்கு ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம். இதையடுத்து போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், அந்தப் பையில் கஞ்சா சாக்லேட் இருப்பது தெரிய வந்தது. பையில் இருந்த ஒன்றே கால் கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனா்.

போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில் அவா், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அமுல்குமாா் யாதவ் (52) என்பதும், ராயப்பேட்டையில் தங்கியிருந்து கஞ்சா சாக்லேட் விற்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அமுல்குமாா் யாதவை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்று 12 வாா்டுகளில் முகாம்

சென்னை மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமை (ஆக.19) 12 வாா்டுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

குவைத்-சென்னை விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா். குவைத்திலிருந்து 144 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. விமா... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவையை மத்திய வெளியுறவுத் துறையின் கடவுச்சீட்டு சேவைத் திட்ட இயக்குநா் எஸ்.கோவிந்தன் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் ஒரே நாளில் 3 குழந்தைகள் மீட்பு

சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 3 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் திங்கள்கிழமை மீட்டனா். சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17)... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

தண்டையாா்பேட்டை துணைமின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இடங்கள்: கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச்.சாலை, ஜி.ஏ.சா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து சேவையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கல்வி நிலையங்களுக்க... மேலும் பார்க்க