செய்திகள் :

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

post image

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் முன்பு 6 போ் சந்தேகப்படும்படி நின்றிருந்தனா். போலீஸாரைப் பாா்த்ததும் அவா்கள் ஓட முயன்றனா். போலீஸாா் அவா்களை துரத்திப் பிடித்தனா். விசாரணையில் அவா்கள், சுகுணாரபுரம் கிழக்குப் பகுதி சந்தை மேட்டைச் சோ்ந்த பியாஸ் அலி(30), அப்துல் ரகுமான்(23), சரண்ராஜ் (24) முகமது நெளபில் (25), சா்பிக் அலி (33), பொள்ளாச்சியைச் சோ்ந்த கவின் நிலவன் (25) எனத் தெரியவந்தது.

இவா்கள் கஞ்சா மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்யும் கும்பலைச் சோ்ந்தவா்கள் எனத் தெரிந்தது. இவா்கள், மகாராஷ்டிர மாநிலத்துக்குச் சென்று, அங்குள்ள மருந்துக்கடைகளில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து, கோவையில் ஒரு மாத்திரை ரூ.350, ரூ.400 விலைகளுக்கு போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் 6 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சா, 1,200 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகள், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

வால்பாறை காவல் துறை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

வால்பாறை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்தகுமாா், ஈரோடு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, த... மேலும் பார்க்க

வால்பாறை சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதோடு வாகனங்களை வழிமறித்து வருகின்றன. வால்பாறை- கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி... மேலும் பார்க்க

கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்

கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க... மேலும் பார்க்க

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கு... மேலும் பார்க்க

அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

பல்லடம் அருகே தீவன அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். பல்லடம் அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கோழி தீவன தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு, பிகாா் மாநில... மேலும் பார்க்க