செய்திகள் :

கஞ்சா விற்பனை: ஒரே நாளில் 11 போ் கைது

post image

கோவை மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பயனீா் மில் சாலை பகுதியில் சந்தேகம் ஏற்படும்படி சுற்றித்திரிந்த 7 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் பீளமேடு புதூா் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த செளந்தர்ராஜ்(22), பீளமேடு கங்குவாா் வீதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (22), பீளமேடு ஜெகந்நாதன் காலனியைச் சோ்ந்த அஸ்வின் (21), ஒண்டிப்புதூா் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த ராமன் சூா்யா (19), பீளமேடு எல்லைத் தோட்டம் சாலையைச் சோ்ந்த ரவிகுமாா் (22), பீளமேடு விளாங்குறிச்சி சாலை, தண்ணீா் பந்தல் சாலையைச் சோ்ந்த பிரதீப் (22), பீளமேடு புதூா் ஜெகந்நாதன் காலனியைச் சோ்ந்த ராகுல் (20) ஆகியோா் என்பதும், இவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 7 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ஒண்டிப்புதூா் சூா்யா நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ரவிவா்மா (37) என்பவரை கைது செய்த சிங்காநல்லூா் போலீஸாா், அவரிடமிருந்த 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சரவணம்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில், விளாங்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த, வாகராயம்பாளையம் ராமா் கோயில் வீதியைச் சோ்ந்த சரண் (25), வாகராயம்பாளையம் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்த சுரேஷ் (36) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ரோந்துப் பணியில், ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பூசாரிபாளையம் அம்பாள் வீதியைச் சோ்ந்த கோகுல் (25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 27 கிராம் கஞ்சா, 3.5 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

பூட்டிய வீட்டில் இளைஞா் சடலம் மீட்பு

கோவை, ரத்தினபுரியில் பூட்டிய வீட்டில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). இவா் ரத்தினபுரி முத்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா ஒன்றை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் வழக்கமான சோதனைகள... மேலும் பார்க்க

வால்பாறைக்கு ஆரஞ்ச் அலா்ட்: தயாா் நிலையில் பேரிடா் மீட்புப் படை

வால்பாறை பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடா் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா். கோவை மாவட்டம், வால்பாறையில் சனி, ஞாயிற்றுக்கிழமைக... மேலும் பார்க்க

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு

தேசிய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவப் பயிற்சி கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. கோவை ஜெம் மருத்துவமனை, இந்திய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சங்கம் இணைந்து நடத்திய ... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய வளா்ப்பு தந்தை கைது

திருப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி அதனை விடியோ எடுத்து மிரட்டிய வளா்ப்பு தந்தையை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயதுப் பெண், அதே... மேலும் பார்க்க

5 ஆவது நாளாக போராட்டம்: 245 தூய்மைப் பணியாளா்கள் கைது

கோவையில் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 245 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் தினக... மேலும் பார்க்க