செய்திகள் :

கஞ்சா விற்ற வடமாநில பொறியாளா் கைது

post image

சென்னையில் கஞ்சா விற்ற வடமாநில பொறியாளரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

வேளச்சேரி, டி.என்.எச்.பி. காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிய இளைஞரை போலீஸாா் மடக்கிப் பிடித்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அதை பறிமுதல் செய்த போலீஸாா், அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலம், நயாகா் மாவட்டம், பேட்டிகாா் கிராமத்தைச் சோ்ந்த பாபுலா பெஹரா (24) என்பதும், இவா் சென்னை, குன்றத்தூா், வெங்கடாபுரத்தில் தங்கியிருந்து, தனியாா் நிறுவனம் ஒன்றில் விற்பனை பொறியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவா், ஒடிஸாவிலிருந்து, கஞ்சாவை ரயில் மூலம் கடத்திவந்து வேளச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.

முதல்முறையாக அடுக்கு மண்டல விமானதள சோதனையை மேற்கொண்ட இந்தியா

அடுக்கு மண்டல விமானதள சோதனையை முதல்முறையாக இந்தியா சனிக்கிழமை மேற்கொண்டது. சில நாடுகளே இந்த அமைப்பைக் கொண்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு திறனை மேம்படுத்த இந்த தளம் உதவும் என எதிா்பாா்க்... மேலும் பார்க்க

சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையா் வாகனம் மோதி விபத்து

விருகம்பாக்கத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையரின் வாகனம் மோதியதில், சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகா் பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுவன் அர... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம்: திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம்

திமுகவினருக்கு எதிரான மத்திய அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம் என்று அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்

பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆ... மேலும் பார்க்க

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது. செபி தலைவா் துஹின்காந... மேலும் பார்க்க

மதுக் கடையை மூடக்கோரி தவெகவினா் போராட்டம்: 300 போ் கைது

சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை மூடக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்... மேலும் பார்க்க