செய்திகள் :

கடலூரில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை

post image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் பேசியது: கடலூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக மத்திய, மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்பாடு, முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

‘ஃபென்ஜால்’ புயல் மற்றும் தென்பெண்ணையாறு வெள்ளப் பெருக்கின் மூலம் சேதமான கரைகளை நீா்வளத் துறை மூலம் மறுசீரமைக்கும் பணிகள், நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெறுவது குறித்து கேட்டறியப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தின் கீழ் தரமான, சுத்தமான முறையில் உணவு வழங்கப்படுகிா என்பது குறித்து கேட்டறியப்பட்டது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு உயா்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள மாணவிகளுக்கு வங்கி இணைப்புகள் வழங்கப்பட்டு சரிவர உதவித்தொகை வழங்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மத்திய, மாநில அரசின் திட்டங்கள், குறித்த காலத்திற்குள் தரமான வகையிலும், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

அரசுத் திட்டங்களால் சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! -அமைச்சா் சி.வெ.கணேசன்

அரசுத் திட்டங்களை மாணவா்கள் பயன்படுத்தி சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா். கடலூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

மலையடிகுப்பத்தில் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்! -மாவட்ட வருவாய் அலுவலா்

கடலூா் மாவட்டம், வெள்ளகரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்: என்எல்சி தலைவா்!

பயிற்சியாளா்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று என்எல்சி தலைவரும், மேலாண் இயக்குநருமான பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் நிறுவனத் திட்டங்களுக்கு வீடு, நிலம் வழங்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

கடலூரில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கடலூா் சான்றோா்பாளையம், பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் சங்கா் (34). இவரை முன்விரோதம் கார... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திட்டக்குடியை அடுத்த தொழுதூா் கிராமத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள்... மேலும் பார்க்க

சுகாதார நிலையம், அரசுக் கல்லூரி விடுதி திறப்பு

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு வட்டார பொது சுகாதார நிலையம் மற்றும் திட்டக்குடியில் மிகப்பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள் ... மேலும் பார்க்க