ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகள் கிடைப்பதில்லை என்பதில் உண்மையில்லை: ஜெ.பி.நட்...
கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! ரூ. 10 லட்சம் கோடி இழப்பு!!
சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும் நிஃப்டி 23,100 புள்ளிகளுக்குக் கீழும் குறைந்து பங்குச்சந்தை இன்று(பிப். 11) கடும் சரிவுடன் வர்த்தகமானது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,384.98 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகலில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. வர்த்தக நேர முடிவில் 1,018.20 புள்ளிகள் குறைந்து 76,293.60 புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதிகபட்சமாக 1,200 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 309.80 புள்ளிகள் குறைந்து 23,071.80 புள்ளிகளில் முடிவடைந்தது.
இதையும் படிக்க | பிசிஓஎஸ் பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? - நம்பிக்கையும் உண்மையும்!
நிஃப்டியில் அப்பல்லோ மருத்துவமனை, ஈச்சர் மோட்டார்ஸ், ஸ்ரீராம் நிதி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தன.
அதேநேரத்தில் அதானி எண்டர்பிரைசஸ், டிரென்ட், பாரதி ஏர்டெல், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை லாபத்தில் முடிவடைந்தன.
நுகர்வோர் சாதனங்கள், மூலதனப் பொருள்கள், ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு, சுகாதாரம், மின்சாரம், பொதுத்துறை நிறுவனம், ரியல் எஸ்டேட், தொலைத்தொடர்பு போன்ற அனைத்துத் துறை குறியீடுகளும் 1-3 சதவீதம் வரை சரிந்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 3 சதவீதமும் ஸ்மால்கேப் குறியீடு 3 சதவீதத்திற்கும் அதிகமாகவும் சரிந்தது.