செய்திகள் :

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு ஐடிஐகளில் இலவச தொழில் பயிற்சி

post image

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் பல்வேறு தொழில் பிரிவுகளில் ஊதியத்துடன் கூடிய கட்டணமில்லா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழிலாளா் நலன், மேம்பாட்டுத் துறை ஆணைப்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50,000 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தொழில் சாா்ந்த நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்து அவா்களின் திறன் மேம்படுத்தப்பட உள்ளது.

இதற்காக அந்தந்த மாவட்டத்திலேயே அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் வாயிலாக கொத்தனாா், தச்சா், கம்பி வளைப்பவா், எலக்ட்ரீசியன், பிளம்பா், வெல்டா், பிளாக் ஸ்மித், குளிா் சாதன பழுது நீக்குதல், கண்ணாடி வேலைப்பாடு, வண்ணம் பூசுதல், டைல்ஸ் லேயா் ஒட்டுதல் ஆகிய 11 தொழில் பிரிவுகளில் அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்துள்ள 1,300 கட்டுமானத் தொழிலாளா்களுக்கும், சிவகங்கை அரசு தொழில் பயிற்சி மையம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி மையங்களின் மூலம் ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதல் வார பயிற்சி வருகிற 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதைத் தொடா்ந்து, அடுத்த 4 மாதங்களும் வாரந்தோறும் பயிற்சி அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்பவா்களுக்கு தினமும் ஊதியமாக ரூ.800 வீதம் 7 நாள்களுக்கு ரூ.5,600-ம், இலவச உணவும் வழங்கப்படும். இந்தப் பயிற்சிகளில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. எனவே, பயிற்சிகளில் கலந்து கொள்ள விருப்பும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள், தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம், (சமூக பாதுகாப்புத் திட்டம்), ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை கட்டடம், தோட்டக்கலை துறை அருகில், காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575 -290590 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என்றாா் அவா்.

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

சிவகங்கை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முதல்வா் க... மேலும் பார்க்க

புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், வே. மிக்கேல்பட்டிணத்திலுள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தின் 109 -ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு வே. மிக்கேல் பட்டணம் பங்குத்தந்தை ச... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட திட்டப் பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், ரூ.100.38 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டத்தி... மேலும் பார்க்க

முத்தனேந்தல் ஊராட்சியில் கழிவு சேகரிப்பு இயக்கம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், முத்தனேந்தல் ஊராட்சியில் தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்பத்தூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மூலவா் சோமந... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், சின்னக்கண்ணனூரில் பட்டியலினத்தினருக்கான மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. ராமநாதபுரம், விருதுநக... மேலும் பார்க்க