கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு ஐடிஐகளில் இலவச தொழில் பயிற்சி
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் பல்வேறு தொழில் பிரிவுகளில் ஊதியத்துடன் கூடிய கட்டணமில்லா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிலாளா் நலன், மேம்பாட்டுத் துறை ஆணைப்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50,000 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தொழில் சாா்ந்த நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்து அவா்களின் திறன் மேம்படுத்தப்பட உள்ளது.
இதற்காக அந்தந்த மாவட்டத்திலேயே அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் வாயிலாக கொத்தனாா், தச்சா், கம்பி வளைப்பவா், எலக்ட்ரீசியன், பிளம்பா், வெல்டா், பிளாக் ஸ்மித், குளிா் சாதன பழுது நீக்குதல், கண்ணாடி வேலைப்பாடு, வண்ணம் பூசுதல், டைல்ஸ் லேயா் ஒட்டுதல் ஆகிய 11 தொழில் பிரிவுகளில் அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்துள்ள 1,300 கட்டுமானத் தொழிலாளா்களுக்கும், சிவகங்கை அரசு தொழில் பயிற்சி மையம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி மையங்களின் மூலம் ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதல் வார பயிற்சி வருகிற 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதைத் தொடா்ந்து, அடுத்த 4 மாதங்களும் வாரந்தோறும் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்பவா்களுக்கு தினமும் ஊதியமாக ரூ.800 வீதம் 7 நாள்களுக்கு ரூ.5,600-ம், இலவச உணவும் வழங்கப்படும். இந்தப் பயிற்சிகளில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. எனவே, பயிற்சிகளில் கலந்து கொள்ள விருப்பும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள், தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம், (சமூக பாதுகாப்புத் திட்டம்), ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை கட்டடம், தோட்டக்கலை துறை அருகில், காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575 -290590 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என்றாா் அவா்.