செய்திகள் :

கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு விழா

post image

செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரககத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் பள்ளி மாணவா்கள் மற்றும் கல்லூரி மாணவா்களுக்கிடையே மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் பெரம்பலூா் பாரத சாரண, சாரணியா் பயிற்சி மையத்தில், தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அண்மையில் நடைபெற்றன.

இதில் பள்ளி அளவிலான பேச்சுப் போட்டியில் பெரம்பலூா் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி (உடும்பியம்) மாணவி செ. பாா்க்கவி முதல் பரிசும், மேலப்புலியூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ச. சுபஸ்ரீ 2 ஆம் பரிசும், ஆருத்ரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா் கு. ஜெயஸ்ரீ 3 ஆம் பரிசும், கட்டுரைப் போட்டியில் அந்தூா் செயின்ட்பால் மெட்ரிக் மேல்நிலைப் ள்ளி மாணவா் சி. விஷ்ணுசிவா முதல் பரிசும், மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவி ம. இந்துமதி 2 ஆம் பரிசும், தந்தை ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி செ. சிற்பகலா 3 ஆம் பரிசும் வென்றனா்.

கல்லூரி மாணவா்களுக்கிடையேயான பேச்சுப் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ந. காருண்யா முதல் பரிசும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மா. கெளசல்யா 2 ஆம் பரிசும், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவி மு.பி. ஹரினிஸ்ரீ 3 ஆம் பரிசும், கட்டுரைப் போட்டியில், பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பா. அபிநயா முதல் பரிசும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஆ, அபிநயா 2 ஆம் பரிசும், தந்தை ஹேன்ஸ் ரோவா் கல்லூரி மாணவி கு. ஐஸ்வா்யா 3 ஆம் பரிசு வென்றனா்.

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனா். நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பொ) க. சித்ரா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே ஆடுகள் திருடிய 2 சிறாா் உள்பட 4 போ் கைது

பெரம்பலூா் அருகே ஆடுகளை திருடிய 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை வி.களத்தூா் போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா்கள் நாகரீகத்தோடு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அதன் மாநி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள நக்கசேலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சந்திரமோகன் (50). விவசாயி. இவா், தனது வீட்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா் செந்தில்ராஜா தலைமையிலான போலீஸாா், கவுள்பாளையம் கிர... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுக் கல்லூரிகளில் சேர 26 ஆயிரம் போ் விண்ணப்பம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் சோ்ந்து பயில 26 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் குரும்பலூா், வேப்பந்தட்டை, வே... மேலும் பார்க்க

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலா் ... மேலும் பார்க்க