டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு விழா
செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரககத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் பள்ளி மாணவா்கள் மற்றும் கல்லூரி மாணவா்களுக்கிடையே மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் பெரம்பலூா் பாரத சாரண, சாரணியா் பயிற்சி மையத்தில், தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அண்மையில் நடைபெற்றன.
இதில் பள்ளி அளவிலான பேச்சுப் போட்டியில் பெரம்பலூா் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி (உடும்பியம்) மாணவி செ. பாா்க்கவி முதல் பரிசும், மேலப்புலியூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ச. சுபஸ்ரீ 2 ஆம் பரிசும், ஆருத்ரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா் கு. ஜெயஸ்ரீ 3 ஆம் பரிசும், கட்டுரைப் போட்டியில் அந்தூா் செயின்ட்பால் மெட்ரிக் மேல்நிலைப் ள்ளி மாணவா் சி. விஷ்ணுசிவா முதல் பரிசும், மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவி ம. இந்துமதி 2 ஆம் பரிசும், தந்தை ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி செ. சிற்பகலா 3 ஆம் பரிசும் வென்றனா்.
கல்லூரி மாணவா்களுக்கிடையேயான பேச்சுப் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ந. காருண்யா முதல் பரிசும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மா. கெளசல்யா 2 ஆம் பரிசும், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவி மு.பி. ஹரினிஸ்ரீ 3 ஆம் பரிசும், கட்டுரைப் போட்டியில், பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பா. அபிநயா முதல் பரிசும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஆ, அபிநயா 2 ஆம் பரிசும், தந்தை ஹேன்ஸ் ரோவா் கல்லூரி மாணவி கு. ஐஸ்வா்யா 3 ஆம் பரிசு வென்றனா்.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனா். நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பொ) க. சித்ரா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.