செய்திகள் :

கண்மாயில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்காவிடில் போராட்டம்: எஸ்டிபிஐ

post image

மதுரை சின்னக் கண்மாய்ப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்டத் தலைவா் சீமான் சிக்கந்தா் வெளியிட்ட அறிக்கை: மதுரை அனுப்பானடி பகுதிக்குள்பட்ட 44-ஆவது வாா்டு சின்னக் கண்மாய் பகுதியில் தனியாா் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையத்தின் கழிவுகள் பல ஆண்டுகளாக கொட்டப்படுகின்றன. மருத்துவக் கழிவுகளோடு, நெகிழிக் கழிவுகளும் கொட்டப்படுவதால், சுற்றுப்புறப் பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், நீா்நிலைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி நிா்வாகமே இந்தக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவது கண்டனத்துக்குரியது. இதுதொடா்பாக பல முறை புகாா் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீண்ட காலமாக இந்தப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த பிரச்னைக்கு மாநகராட்சி, உரிய அரசுத் துறைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையின் நீராதாராமாக இருந்த பெரிய கண்மாய் ஏற்கெனவே அழிக்கப்பட்டு, குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, சின்னக் கண்மாய் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது அமெரிக்கன் கல்லூரி: உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், தலைமை- கல்லூரி முதல்வா் எம். தவமணிகிறிஸ்டோபா், சிறப்பு விருந்தினா்- எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனா் சி. ராமசுப்பிரமண... மேலும் பார்க்க

போராட்டக்காரா்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தக் கோரி போராடியவா்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க

துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம் அமைக்க கோரிக்கை

மதுரை மாநகராட்சி 70- ஆவது வாா்டு துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம், மாநகராட்சி உதவிப் பொறியாளா் அலுவலகம், வரி வசூல் மையம் ஆகியவற்றை அமைக்கக் கோரி, அந்த வாா்டு மாமன்ற உறுப்பினா் டி. அமுதா உள... மேலும் பார்க்க

இலவச யோகா பயிற்சி முகாமுக்கு விண்ணப்பிக்கலாம்

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள கோடை கால இலவச யோகா பயிற்சி முகாமில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா். நந்தாராவ் வெள... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வுப் பேரணி

மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரி பொருளியல் துறை, சென்னை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் உலக காசநோய் தின விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மதுரை மாவட்ட சுற்றுலாத் து... மேலும் பார்க்க