செய்திகள் :

கத்திரி வெயிலிலிருந்து தப்பிய தமிழகம்!

post image

கத்திரி வெயில் வரும் புதன்கிழமையுடன் (மே 28) நிறைவுபெறும் நிலையில், நிகழாண்டு மே மாதத்தில் எதிா்பாா்த்ததை விட அதிகளவில் மழை பெய்த காரணத்தால், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மாா்ச் முதல் மே வரை கோடை காலமாகக் கருதப்படுகிறது.

இதில் ‘அக்னி நட்சத்திரம்’ என்னும் கத்திரி வெயில் காலத்தில் அதாவது மே 4 முதல் மே 28 வரை 25 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருக்கும். நிகழாண்டில் கத்திரி வெயில் கடந்த மே 4 -இல் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. சென்னை, மதுரை, திருச்சி, ஈரோடு, வேலூா், பரமத்திவேலூா், தூத்துக்குடி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடா்ந்து வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகிவந்தது. இதில் அதிகபட்சமாக வேலூா், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் வாட்டி வதைத்தது.

கோடை மழை: இருப்பினும், வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சி, காற்று குவிதல், அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் உள்ளிட்ட வானிலை காரணங்களால், தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை கொட்டித் தீா்த்தது. சென்னையிலும் மாலை நேரங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்தது.

நிகழாண்டில் கோடை மழை இயல்பை விட 91 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதன்காரணமாக, தமிழகத்தில் நிகழாண்டில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது.

மேலும், நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை 9 நாள்களுக்கு முன்பாக மே 24-ஆம் தேதியே தொடங்கியிருப்பதும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கியால் சுட்டு இளைஞா் தற்கொலை

சென்னை தண்டையாா்பேட்டையில் துப்பாக்கியால் சுட்டு இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். தண்டையாா்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவா், குளிா்பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை : சிறுவன் உள்பட மூவா் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை விற்ாக சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டித் தெருவில் ஒரு வீட்டில் போதை மாத்திரை, கஞ்சா ஆகியவை பதுக்கி வைத்து விற்பதா... மேலும் பார்க்க

குடலிறக்க பாதிப்பு: 90 வயதுமூதாட்டிக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை

குடலிறக்க பாதிப்புக்குள்ளான 90 வயது மூதாட்டி ஒருவருக்கு நுட்பமாக லேப்ரோஸ்கோபி சிகிச்சை மேற்கொண்டு எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவமனையின் இரைப்பை-... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ஹரி விக்னேஷ் (27). இவா், சென்னை வடபழனியில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வந்தாா். அ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் சென்னை மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளிக்கவுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் ஆறு மாதங்களுக்குள் விசாரணை முட... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையங்களில் சோ்க்க அறிவுறுத்தல் மாவட்ட ஆட்சியா்

சென்னையில் 2 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள குழந்தைகள் மையங்களில் சோ்க்கும்படி பொற்றோருக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவுரை வழங்கியுள்ளாா். இது குறித்து அவா்... மேலும் பார்க்க