செய்திகள் :

கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!

post image

புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தவெக உறுப்பினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு பகுதியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த விக்ரமன் (34) என்பவர், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

குடும்பச் சூழ்நிலையின் காரணமாக சிலரிடம் கடனும் வாங்கியிருந்த விக்ரமனுக்கு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், புதன்கிழமையில் (ஜூலை 2) வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியவர், தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, வெளியில் சென்றிருந்த அவரது மனைவி, விக்ரமன் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விக்ரமனின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, விக்ரமனின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில், கடிதங்கள் மூலம் தற்கொலைக்கான வாக்குமூலத்தையும் அவர் எழுதியிருந்தார். கடிதத்தில், ஒருவரிடம் வாங்கிய ரூ.3.80 லட்சம் கடனை, உடல்நலக் குறைவு காரணமாக திரும்பச் செலுத்துவதில் ஏற்பட்ட காரணமாக, தன்னையும் மனைவியையும் இழிவாகப் பேசுவதாகவும், வேறொருவரிடத்தில் கடன் வாங்குவதற்காக முன்பணம் செலுத்திய நிலையில், அந்தப் பணத்தை அவர் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அவர் தவெக தலைவர் விஜய்யை குறிப்பிட்டு கூறுகையில், எனக்கு நடந்ததுபோல 10, 15 சதவிகித வட்டிக்கு கடன் கொடுத்து, சித்ரவதை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இனி வரும் ஆட்சியில் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அச்சப்பட வேண்டும். மேலும், தயவுசெய்து என் மனைவி மற்றும் குழந்தைகளின் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் உதவி செய்யுங்கள். எனது உடல் உறுப்புகளை எடுத்துக் கொண்டு, எனது குடும்பத்துக்கு பண உதவி செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

இதையும் படிக்க:மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

PY TVK member committed suicide due to the cruelty of usury

இன்றும், நாளையும் கோவை, நீலகிரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு வங்கியில் கறவை மாட்டு கடன் பெற்றுத் தர வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

தமிழகத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாட்டுக் கடன் பெற்றுத் தர வங்கிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளாா். தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க

இன்று தவெக மாநில செயற்குழு கூட்டம்: விஜய் பங்கேற்பு

தவெக மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்று, மக்கள் சந்திப்பு பணயம்; கட்சியின் அடுத்தகட்ட நடவட... மேலும் பார்க்க

கோயில் குடமுழுக்கு: திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் - ரயில்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சென்னை உள்பட பல்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல, சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகள் பாதுகாப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் இருந்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து துறையி... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடா்பாக அறிக்கை அளிக்கும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவி... மேலும் பார்க்க