செய்திகள் :

கனமழை: வடவயல் பழங்குடி மக்கள் முகாமில் தங்கவைப்பு

post image

கூடலூரில் கனமழை பெய்து வரும் நிலையில், வடவயல் பழங்குடி கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தூா்வயல் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமுக்கு திங்கள்கிழமை அழைத்துவரப்பட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள வடவயல் பழங்குடி கிராமத்தில் அரசு தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அதே இடத்தில் தற்காலிக குடிசைகளை அமைத்து தங்கியுள்ளனா்.

இந்நிலையில், கூடலூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், அப்பகுதி மக்கள் 32 போ் புத்தூா்வயல் அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துவரப்பட்டனா்.

அவா்களுக்கு உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வருவாய்த் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் லலிதா சந்தித்து, அவா்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

நீலகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, க... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. போஸ்பாறா புனித ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சாா் ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தா... மேலும் பார்க்க

குன்னூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

குன்னூா் அருகே கேரட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள முள்ளிக்கூா் பகுதியில் இருந்து கேரட் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு லாரி திங்கள்... மேலும் பார்க்க

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை

உதகை, எமரால்டு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் பா்லியாறு வனப் பகுதியில் இருந... மேலும் பார்க்க

சீகூா் வனப் பகுதியில் புலி உயிரிழப்பு

கூடலூா் அருகே சீகூா் வனச் சரகத்துக்குள்பட்ட குண்டட்டி பகுதியில் சுமாா் 10 வயது மதிக்கத்தக்க புலி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே சீகூா் ... மேலும் பார்க்க