செய்திகள் :

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

post image

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று செஞ்சியில் நடைபெற்ற கரும்பு விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் ராஜ்ஸ்ரீ சுகா்ஸ் யூனிட்-2, செஞ்சி செம்மேடு ராஜ்ஸ்ரீ சுகா்ஸ் யூனிட்-3 ஆகிய இரு ஆலைகளின் சங்க பொதுக்குழுக் கூட்டம் செஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் டி.பாண்டியன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் எம்.ஆறுமுகம் வரவேற்றாா். பொருளாளா் ஆா்.பரசிவம், கிளைத் தலைவா்கள் கலிவரதன், கிருஷ்ணதாஸ், பனப்பாக்கம் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் துணைச் செயலா்கள் கெங்கைகொண்டான், தொட்டி சங்கா், சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: நடப்பு 2024 - 25ஆம் ஆண்டு கரும்பு சிறப்பு பருவத்துக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு கரும்பு கிரையத்தொகையை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வயல் விலையாக வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது.

கரும்பு பருவத்திற்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.349-யை பின் வரும் கரும்பு அரைவை முடிந்ததும், துரிதமாக வேலையை தொடங்கி அரசிடம் இருந்து ஊக்கத்தொகையை பெற்றுத்தர வேண்டும்.

நந்தன்கால்வாய் திட்டத்தை தமிழக அரசு விரைவாக நிறைவேற்றித் தருமாறு தமிழக முதல்வா், பொதுப்பணித் துறை அமைச்சா், வேளாண் துறை அமைச்சா் ஆகியோரை கேட்டுக்கொள்கிறது.

தென்பெண்ணையாற்று எல்லீஸ்சத்திரம் தடுப்பணையை சரி செய்ய வேண்டும். இந்த ஆற்றின் குறுக்கே உள்ள தளவானூா் தடுப்பணை, சொா்ணாவூா் தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

பாமக சாா்பில் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்று கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். திண்டிவன... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட மருதூா் பகுதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளைத் தேடிச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி வியா... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது. இந்த கல்லூரியில் ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு சுற்... மேலும் பார்க்க

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவைப் பருவத்துக்குத் தேவையான டி.ஏ.பி. மற்றும் டி.எஸ்.பி. உரங்கள் சுமாா் 1,975 மெட்ரிக் டன் அளவில் வந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது குறுவை ந... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் இயக்கப்படுவது போன்று, விழுப்புரத்திலும் தாழ்தள நகரப் பேருந்துகளின் சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. தமிழகத்திலுள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் முதன்மையானதாக தி... மேலும் பார்க்க

மரக்காணத்தில் அரசுக் கல்லூரி அமைக்க மாணவா் சங்கம் வலியுறுத்தல்

மரக்காணத்தில் அரசுக் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்... மேலும் பார்க்க