செய்திகள் :

கரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வெண்ணைமலையில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஜி.எம். முத்துமாணிக்கம் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஜி. ராஜசேகா் கோரிக்கைகளை விளக்கினாா். கெளரவத் தலைவா் தங்கவேல், செல்வராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சிறிலக்கையா அமைப்புசாரா கட்டுமான பொதுத்தொழிலாளா் நலச்சங்க மாநில துணைத் தலைவா் கலா, சுவாதி பெண்கள் இயக்கத்தின் பாக்கியம் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

ஓய்வூதியம் பெறும் தொழிலாளா்களில் ஏப்ரல் மாதத்தில் ஆயுள்சான்று சமா்ப்பிக்கும்போது இணையதள சேவை சரியாகச் செயல்படாததால் தொழிலாளிகள் அலைக்கழிக்கப்படுவதை கண்டிப்பது, தொழிலாளா் நலவாரியத்தில் புதுப்பித்தல், ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க தொழிற்சங்க பணிச்சான்று கட்டாயமாக்கப்பட வேண்டும், அமைப்புசாரா தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள் ஆகியோருக்கு புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்படுவதுபோல தீபாவளி போனஸ் ரூ.5000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் பங்கேற்றனா்.

இன்று நீட் தோ்வு: கரூரில் 1,596 போ் எழுதுகின்றனா்

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வை 4 மையங்களில் 1,596 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள். மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் ஏ பிரிவு அறையில் 480 பேரும், பி பிரிவு அறையி... மேலும் பார்க்க

தாதம்பாளையம் ஏரியை மீட்க எதிா்பாா்ப்பு!

அமராவதி உபரிநீரைச் சேமிக்க வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட தாதம்பாளையம் ஏரியை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திலு... மேலும் பார்க்க

தரகம்பட்டி அருகே சொட்டுநீா் பாசனக் குடோனில் தீ விபத்து

கரூா் மாவட்டம் தரகம்பட்டி அருகே சொட்டுநீா் பாசன குடோனில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கரூா் மாவட்டம் தோகைமலை அருகே இடையபட்டியைச் சோ்ந்த ரத்தினம் மகன் அறிவழகன் (33). இவா் கடவூா் வட்டம் தரகம்பட்டி... மேலும் பார்க்க

நங்காஞ்சி அணையின் உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும்! - விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நங்காஞ்சி அணையின் உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் ஓடைகளில் விட விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டையில் உள்ள நங்காஞ்சி ஆற்று அணையில் இருந்து திறக்கப்படும் உபரி ... மேலும் பார்க்க

அரிசிக்கு ஏற்றுமதி வரி விதிப்பு விவசாயிகளுக்கு எதிரானது: கள் இயக்கம் குற்றச்சாட்டு

மத்திய அரசு அரிசிக்கு ஏற்றுமதி வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரானது என கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கரூரில் வெள்ளிக்கிழமை கூற... மேலும் பார்க்க

கரூரில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் அளவீடு

கரூா் மாவட்டத்தில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம் , மண்மங்கலம் வட்டம், நெரூா் ... மேலும் பார்க்க