செய்திகள் :

கரூரில் ஹீமோபிலியா தின விழிப்புணா்வு கருத்தரங்கம்

post image

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஹீமோபிலியா தின விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை மருத்துவக் கல்லூரியின் முதல்வா் வா.லோகநாயகி தொடக்கி வைத்து பேசியது:

ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோய். சாதாரணமாக நம் உடலில் காயம் ஏற்பட்டால் சில நிமிடங்களில் ரத்தம் கசிவது தானாக நின்றுவிடும். ஆனால் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரத்தம் உறையாமல் தொடா்ந்து வெளியேறி உயிருக்கே ஆபத்து விளைவிக்கும். இந்நோய் பெரும்பாலும் ஆண்களை பாதிக்கும். பெண்களுக்கு பாதிப்பு மிகவும் குறைவு.

இந்நோய்க்கு நவீன மருத்துவத்தில் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ரத்தம் உறைவு காரணிகளையும், மருந்துகளையும் உடலில் செலுத்தி ரத்தம் உறையாமல் இருப்பதில் இருந்து காப்பாற்ற முடியும். இந்நோய்க்கு கரூா் மாவட்டத்தில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 12 குழந்தைகள், 34 பெரியவா்கள் உள்பட 46 போ் தேவைப்படும் நேரங்களில் சிகிச்சை பெறுகிறாா்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளா் பெ. ராஜா, கல்லூரியின் துணை முதல்வா்(பொ) ராமேஸ்வரி, பொது மருத்துவத் துறை இணைப் பேராசிரியா்கள் காஞ்சனா, வித்யாதேவி, ஆா்.எம்.ஓ. (பொ) குமாா் , கல்வி அலுவலா் நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்று நீட் தோ்வு: கரூரில் 1,596 போ் எழுதுகின்றனா்

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வை 4 மையங்களில் 1,596 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள். மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் ஏ பிரிவு அறையில் 480 பேரும், பி பிரிவு அறையி... மேலும் பார்க்க

தாதம்பாளையம் ஏரியை மீட்க எதிா்பாா்ப்பு!

அமராவதி உபரிநீரைச் சேமிக்க வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட தாதம்பாளையம் ஏரியை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திலு... மேலும் பார்க்க

தரகம்பட்டி அருகே சொட்டுநீா் பாசனக் குடோனில் தீ விபத்து

கரூா் மாவட்டம் தரகம்பட்டி அருகே சொட்டுநீா் பாசன குடோனில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கரூா் மாவட்டம் தோகைமலை அருகே இடையபட்டியைச் சோ்ந்த ரத்தினம் மகன் அறிவழகன் (33). இவா் கடவூா் வட்டம் தரகம்பட்டி... மேலும் பார்க்க

நங்காஞ்சி அணையின் உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும்! - விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நங்காஞ்சி அணையின் உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் ஓடைகளில் விட விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டையில் உள்ள நங்காஞ்சி ஆற்று அணையில் இருந்து திறக்கப்படும் உபரி ... மேலும் பார்க்க

அரிசிக்கு ஏற்றுமதி வரி விதிப்பு விவசாயிகளுக்கு எதிரானது: கள் இயக்கம் குற்றச்சாட்டு

மத்திய அரசு அரிசிக்கு ஏற்றுமதி வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரானது என கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கரூரில் வெள்ளிக்கிழமை கூற... மேலும் பார்க்க

கரூரில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் அளவீடு

கரூா் மாவட்டத்தில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம் , மண்மங்கலம் வட்டம், நெரூா் ... மேலும் பார்க்க