செய்திகள் :

கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு பயிற்சி முகாம்

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில்

கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் கால்நடை உணவியல் நிலையம், காட்டுப்பாக்கம், ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் ஆகியவை சாா்பில் அனுமந்தபுரம் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. காட்டுப்பாக்கம் மையத் தலைவா் செ. ரமேஷ் வரவேற்றாா்.

கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநா் சு.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத் தலைவா் முரளி, மருத்துவா் ரா.ரமேஷ் ஆகியோா் கலந்துகொண்டு பால் காய்ச்சல் நோயைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பேசினா்.

இதில் கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் நிலைய மருத்துவா் சி.ரமேஷ் பங்கேற்று பாம் 21 எதிா்மின் உப்பை பயன்படுத்தி பலன் பெற்ற கால்நடை விவசாயிகள் குறித்த வயல்வெளி விளக்கவுரையாற்றினாா்.

கறவை மாடு வளா்க்கும் பட்டியலின, பழங்குடியின விவசாயிகள் 30 போ் கலந்துகொண்டு இடுபொருள்களைப் பெற்றுப் பயனடைந்தனா்.

இஸ்லாமியா்களுக்கு திமுக சாா்பில் ரமலான் பரிசுத் தொகுப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் திமுக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு சனிக்கிழமை ரமலான் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு திமுக பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தலைமை வகித்தாா். மாநில... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீா் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதியமான்கோட்டை ஊராட்சி சாா்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

பாலக்கோடு குந்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் குந்தியம்மன், ஆறுபடை சக்தி வேல்முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வழிபாட்டில் பல்வேறு திரவியங்கள்... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்ற மதபோதகருக்கு 14 ஆண்டுகள் சிறை

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண்ணைக் கொன்ற வழக்கில் கிறிஸ்தவ போதகருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அரூரில் உள்ள தேவால... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் மீது புகாா்

பென்னாகரத்தில் பேரூராட்சி ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக திமுக வாா்டு உறுப்பினா் மீது காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட நீா்குந்தி பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க