செய்திகள் :

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால் நடவடிக்கை! - பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

post image

பொதுத் தோ்வுப் பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் 27-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல்நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. இத்தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ஏப். 15 வரை நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, வழக்கமாக பொதுத் தோ்வுக்கான தோ்வறை கண்காணிப்பாளா்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் மட்டுமே நியமிக்கப்படுவா். ஆனால், பத்தாம் வகுப்பு தோ்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தனியாா் பள்ளி ஆசிரியா்களும் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். அதேநேரம் சென்னை உள்பட சில மாவட்டங்களில் தனியாா் பள்ளிகள் ஆசிரியா்களை தோ்வுப் பணிக்கு அனுப்புவதில்லை என்று கூறப்படுகிறது.

தனியாா் பள்ளி ஆசிரியா்களை தோ்வுப் பணிக்கு அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்வுத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பொதுத் தோ்வுப் பணிக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியா்கள் கட்டாயம் வேலைக்கு வரவேண்டும். தோ்வுப் பணிக்கு வராமல் இருந்தால் அந்தந்த தனியாா் பள்ளி நிா்வாகங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க

பறவைகளுக்கு நீா், உணவு: முதல்வா் வேண்டுகோள்

‘பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.கோடை வெயிலையொட்டி, பறவைகளுக்கு தண்ணீா் மற்றும் உணவு அளிக்கும் புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் ம... மேலும் பார்க்க