கல்யாண வரமருளும் கங்கணப் பிராப்த பூஜை! நீங்கள் நினைத்த வரன் உடனே கிடைக்கும் அதிசயம்!
சக்தி விகடன் வாசகர்களின் குறைகள் தீரவும் வளங்கள் சேரவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. திருமண வரமும் குடும்ப சுபீட்சமும் அருளும் பரிகார பூஜை.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
கௌரவமான குடும்ப வாழ்க்கைக்குத் திருமணம் அவசியமாகிறது. தலைமுறைத் தலைமுறையாக வாரிசுகள் சிறப்பாகத் தொடர்ந்து வளர நல்ல திருமண பந்தம் ஒவ்வொருவருக்கும் தேவையாகிறது.
விரும்பிய வண்ணம் மணமகனோ மணமகளோ அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆஸ்தி, அந்தஸ்து, அழகு, திறமை எல்லாம் இருந்தும் பலருக்குச் சரியான வரன் அமைவது இல்லை.
ஒருவேளை அமைந்தாலும் அந்தத் திருமண பந்தம் தொடர்ந்து நிலைப்பதும் இல்லை. இனிமையான இல்லறம் அமைய ஒருவருக்கு ஜாதக பலம், தெய்வ பலம், பித்ருக்களின் ஆசி எனப் பல விஷயங்கள் சாதகமாக அமைய வேண்டும் என்கிறது ஆன்மிகம்.

எல்லா விஷயங்களும் பாதகமாக அமைந்தாலும் ஒரு சில விசேஷமான திருத்தலங்கள் ஒருவரின் பாதகங்களை எல்லாம் சாதகமாக்கி திருமண வரத்தை அளிக்கின்றன. இறைவனின் மீது ஆழ்ந்த நம்பிக்கை, சில எளிய பரிகாரங்கள் வழியே நம் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பது ஆன்மிக நம்பிக்கை.
அந்த வகையில் சிறப்பானதொரு கல்யாணப் பரிகாரத் தலம் ஒன்று புதுச்சேரி தென்னம்பாக்கத்தில் உள்ளது. ஆம் திருமணப் பரிகாரம் மட்டுமின்றி இது சர்வப் பரிகாரத் தலமாகவும் இது இப்போது சிறந்து விளங்கி வருகிறது.
வைகுந்தம் விட்டு நீங்கிய மகாலக்ஷ்மி தென்னகத்தில் பல்வேறு தலங்களில் தவமிருந்து திருமாலை வேண்டினாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த வகையில் அந்நாளைய நடுநாட்டில் திருமகள் எழுந்தருளிய தலங்களுள் இந்த தென்னம்பாக்கமும் ஒன்று என்று நம்பப்படுகிறது.
மாதிருபுரம், புண்டரீகா க்ஷேத்ரம், ரமாபுரி என்றெல்லாம் போற்றப்பட்ட இத்தலத்தில் தேவர்களுக்குக் கல்யாணத் திருக்கோலத்தில் கல்யாண வேங்கடேசரும் மகாலட்சுமியும் காட்சி தந்து வரம் அருளினர்.
அதே இடத்தில தேவர்களால் பெரும் ஆலயம் ஒன்று எழுந்தது என்கிறது தலவரலாறு.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மறைந்திருந்த மாதவன் தம்மை மீண்டும் வெளிப்படுத்திக் கொள்ள திருவுளம் கொண்டார். பகவான் ஸ்ரீசீதாராம சுவாமிகளின் அருளால் இந்த ஆலயம் கண்டறியப்பட்டது.
மேலும் அகத்தியர் நாடி, வசிஷ்ட நாடி, திருமூலர் நாடி, போகர் நாடி மற்றும் தேவபிரச்னம் யாவும் உத்தரவிட ஸ்ரீமதி செல்வாம்பிகை நாச்சியாரால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. அன்று முதல் இந்த ஆலயம் திருமண வரம் அருளும் விசேஷத் தலமானது.
ஏகாதசி நாளில் இங்கு நடைபெறும் கல்யாணக் கங்கணப் பிராப்த வழிபாடு வெகு சிறப்பானது. இந்நாளில் இங்கு வந்து வழிபட்டு கல்யாண வேங்கடேசருக்கு நடைபெறும் கங்கணப் பிராப்த பூஜையில் கலந்து கொண்டு கங்கணம் கட்டிக் கொண்டால் நிச்சயமாக திருமண வரம் கிடைக்குமாம்.
அவ்வாறு அமையும் திருமண வாழ்வும் நீண்ட காலத்துக்குச் சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கை.

சக்தி விகடன் வாசகர்களின் குறைகள் தீரவும் வளங்கள் சேரவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது.
காலை 11.30 மணி அளவில் நடைபெறும் இந்த விசேஷ பரிகார பூஜையில் நீங்களும் கலந்துகொள்ளலாம். அதன் பலனாக, சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.
இங்கு தரப்படும் ரட்சையும் குங்குமமும் உங்களுக்கான தீர்வாக அமையும். 48 நாள்களுக்குள் உங்கள் பிரச்னை யாவும் தீரும்; உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தையும் அதிசயத்தையும் காண்பீர்கள்!
மேலும் இங்கு ஏகாதசி சக்கரத்தாழ்வார் வழிபாடும், திருவோண பெருமாள் வழிபாடும் சுவாதி நட்சத்திர நாளில் ஸ்ரீநரசிம்ம வழிபாடும் சிறப்பானது.
ராகு-கேதுவுக்கான பரிகார பூஜைகளும் இங்கு சிறப்பானது. தேய்பிறை அஷ்டமியில் செய்யப்படும் துர்கா பூஜையும் உங்கள் வாழ்வை வளமாக்க உதவும் என்பது நம்பிக்கை.
புதுவை தென்னம்பாக்கம் ஸ்ரீகல்யாண வேங்கடேச பெருமாள் தலத்தில் நடைபெறும் கல்யாண கங்கணப் பிராப்த பூஜையில் கலந்து கொண்டால் உங்கள் வாழ்வின் குறைகள் யாவும் தீர்ந்து நலங்கள் சேரும் என்பது நிச்சயம்.
KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...