செய்திகள் :

கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!

post image

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரிலுள்ள கல்லூரியில் ஹோலி நிகச்சிகள் ரத்து செய்யப்பட்டதினால் ஆசிரியர்களை அறைக்குள் வைத்து மாணவர்கள் பூட்டி சிறைப்பிடித்துள்ளனர்.

இந்தூரிலுள்ள 133 ஆண்டுகள் பழமையான ஹோல்கர் அரசு அறிவியல் கல்லூரியில், மாணவர்களால் ஒருகிணைக்கப்பட்டு வருகின்ற மார்ச்.7 அன்று ஹோலி கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நுழைவுக்கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஹோலி நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததுடன் அதனை மொத்தமாக ரத்து செய்ததினால் கோவமடைந்த மாணவர் தலைவர்கள் சிலர் நேற்று (பிப்.24) அங்குள்ள அறையில் கூடியிருந்த ஆசிரியர்களை உள்ளே வைத்து வெளியே தாழிட்டு பூட்டியுள்ளனர்.

மேலும், அந்த அறையினுள் மின்சாரத்தையும் துண்டித்த அவர்கள் ஆசிரியர்களை நோக்கி கோஷங்களை எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 119 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?

இந்நிலையில், சுமார் அரை மணிநேரம் அந்த அறையினுள் பூட்டப்பட்டிருந்த கல்லூரி பணியாளர்களில் ஒருவர் அந்த அறையின் ஜன்னல் வழியாக வெளியே வந்து அந்த பூட்டை திறந்து ஆசிரியர்களை விடுவித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட நிர்வாகத்திடம் அக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் அனாமிகா ஜெயின் புகாரளித்துள்ளார். அதற்கு பதிலளித்த அம்மாவட்ட உயர் அதிகாரி அஷிஷ் சிங் சம்பந்தப்பட்ட மாணவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இருப்பினும், தற்போது வரை இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கும்பமேளாவில் உயிரிழப்பு: யோகி அரசு நிவாரணம் வழங்க வேண்டும் -மமதா பானர்ஜி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.மமதா பானர்ஜி பேசியிருப்பதாவது: “என்னைப் பற்றி யோகி ஆதித... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பெ... மேலும் பார்க்க

மனிதர்களைத் தாக்க முயன்ற செய்யறிவு ரோபோ? விடியோ வைரல்!

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஓர் பகுதியாக ஏஐ எனப்படும்... மேலும் பார்க்க

ஹோட்டல் ஜன்னல் வழியாக வீசி குழந்தை கொலை! அமெரிக்க பெண்ணிடம் விசாரணை!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஹோட்டலின் ஜன்னல் வழியாக வீசப்பட்டு குழந்தையைக் கொன்றதாகக் கூறப்படும் அமெரிக்க பெண்ணை அந்நாட்டு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

நின்றபடியே வேலை பார்ப்பவரா நீங்கள்? அப்போ, இது உங்களுக்குத் தான்!

மாறிவரும் 5ஜி யுகத்தின் வேகத்தில் வேலை செய்யும் முறைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மாறிவருகின்றன. ஓடி, ஓடி உழைத்த காலமெல்லாம் மலையேறிவிட்ட இந்த நவீன காலத்தில் உட்கார்ந்துகொண்டோ அல்லது ஒரே இடத்தி... மேலும் பார்க்க

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது, இங்குள்ள பசுமை எரிசக்தி பி... மேலும் பார்க்க