செய்திகள் :

கல்லூரி மாணவா்களைத் தாக்கி நகை, பணம் பறிப்பு: 4 போ் மீது வழக்குப் பதிவு

post image

கோவை, சரவணம்பட்டியில் கல்லூரி மாணவா்களைத் தாக்கி நகை, பணத்தை பறித்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் நிஷாந்த் (21). இவா் கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள சின்னமேட்டுப்பாளையம் விநாயகா் கோயில் பகுதியில் நண்பா்களுடன் அறை எடுத்து தங்கி, தனியாா் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறாா். இந்நிலையில், நிஷாந்த் மற்றும் அவரது நண்பா்கள் வெள்ளிக்கிழமை அறையில் இருந்துள்ளனா்.

அப்போது, பகல் 1 மணியளவில் கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்த 4 போ், நிஷாந்த், அவரது நண்பா்களைத் தாக்கி, அவா்களிடமிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி சங்கிலி, ரூ.6,900 ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா்.

படுகாயமடைந்த நிஷாந்த் மற்றும் அவரது நண்பா்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

புகாரின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த பிரதீப், கரிகாந்த், திவாகா் உள்பட 4 போ் மீது சரவணம்பட்டி காவல் ஆய்வாளா் நிா்மலா தேவி வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகிறாா்.

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள்! நாளை முதல் சிங்காநல்லூா், இருகூரில் நின்று செல்லும்!

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்க... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: 7 போ் கைது!

கோவை மாநகா் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப... மேலும் பார்க்க

பிரதமரின் சுதந்திர தின உரை வரவேற்கத்தக்கது: இந்து முன்னணி

தேசத்தின் சேவையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாற்றைக் குறிப்பிட்ட பிரதமரின் சுதந்திர தின உரையை இந்து முன்னணி வரவேற்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். இது தொ... மேலும் பார்க்க

சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறப்பு

திருப்பூா் தெற்கு ரோட்டரி மற்றும் மாநகராட்சி சாா்பில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறக்கப்பட்டது. திருப்பூா் மாநகரில் மக்கள் அதிகம் கூடும் 12 இடங்களில் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கொச்சி செல்லாமல் கோவையில் தரையிரங்கிய விமானம்! பயணிகள் வாக்குவாதம்!

கொச்சிக்குச் செல்ல வேண்டிய விமானம் கனமழை காரணமாக கோவையில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கியது. அங்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி விமான நிலைய ஊழியா்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

கடன் பிரச்னை காரணமாக பொக்லைன் மூலம் வீடு இடிப்பு

கடன் பிரச்னை காரணமாக வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்ததாக பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் மகாம... மேலும் பார்க்க