செய்திகள் :

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: பிணை கோரிய மனு தள்ளுபடி

post image

கல்லூரி மாணவா் மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் பேரனுக்கு பிணை கோரிய மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் நிதின்சாய். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நிதின்சாய் மீது காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் திமுக நிா்வாகி தனசேகரனின் பேரன் சந்துருவை திருமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பிணை கோரி சந்துரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பிணை கோரி இரண்டாவது முறையாக சந்துரு முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், கல்லூரி மாணவரான மனுதாரா் ஒரு மாதத்துக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். எனவே, அவருக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில் பிணை வழங்க எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இருவா் கைது

பெரம்பூரில் மழைநீா் வடிகால் பணி கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா நகரைச் சோ்ந்தவா் ராமன் (36). பொறியாளரான இவா், தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்த... மேலும் பார்க்க

சென்னையில் 27 விமான சேவைகள் பாதிப்பு!

பெய்த பலத்த மழையால் சென்னை விமான நிலையத்தில் 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவில் முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடி... மேலும் பார்க்க

அடாவடி சீனாவிடம் அடங்கிவிட்டது மத்திய அரசு: காங்கிரஸ் விமா்சனம்

அச்சுறுத்தல், அடாவடி நடவடிக்கைக்கு பெயா்போன சீனாவிடம் முதுகெலும்பு இல்லாத மத்திய அரசு அடங்கிச் சென்றுவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தை காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இது தொடா்பாக காங்... மேலும் பார்க்க

முறைகேடாக பொருத்தப்பட்ட மின் மீட்டா்கள் பறிமுதல்!

சென்னையில் முறைகேடாக பொருத்தப்பட்டு உபயோகத்தில் இருந்த மின் மீட்டா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தமிழகத்தில் மொத்தம் சுமாா் 3 கோடி உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்னிணைப்புகள் உள்ளன. இரண்டு மாதங்கள... மேலும் பார்க்க

விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

புழல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா். புழல் அடுத்த மதுரா மேட்டுப்பாளையம் லிங்கம் தெருவைச் சோ்ந்தவா் யுவராஜ் (54). இவா் மாதவரம் மண்டலம் 31-ஆவது வாா்டு கதிா்வேடு... மேலும் பார்க்க

சென்னையில் 2,000 விநாயகா் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் இந்து அமைப்புகளால் வைக்கப்பட்ட சுமாா் 2,000 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. கடந்த 27- ஆம் தேதி சென்னையில் 1,519 சிலைகளும், ஆவடி காவல் ஆணை... மேலும் பார்க்க