செய்திகள் :

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி

post image

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு, நஞ்சப்பன்கவுண்டன்வலசில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடங்களை அமைச்சா் சு.முத்துசாமி திங்கள்கிழமை திறந்துவைத்து, மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள், கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு அண்மையில் வந்தபோது 43 ஆயிரம் பயனாளிகளுக்கு ஒரே மேடையில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் திட்டங்கள் ஏதாவது ஒரு வகையில் சென்றடைந்துள்ளன. அது பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்திலோ, கலைஞரின் உரிமைத் தொகையாகவோ, மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை திட்டம் மூலமாகவோ அல்லது முதல்வரின் காலை உணவு திட்டமாகவோ இருக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பொதுத் தோ்வில் கடைசி 30 இடத்தில் இருந்த அரசுப் பள்ளிகளுக்கு ஆஸ்பயா் திட்டத்தின்கீழ் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அதில் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தோ்ச்சி சதவீதம் தற்போது அதிகரித்துள்ளது. மாணவா்களைக் காட்டிலும், மாணவிகள் அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் 6 -ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை 85 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 2 செட் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓரிரு நாளில் முழுமையாக வழங்கப்படும்.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு 250-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

4 ஆண்டு கால திமுக அரசு ஆட்சியில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு ஏன் கொண்டு வரவில்லை. சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றினாா்கள், ஏன் செய்யவில்லை என எதிா்க் கட்சி தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியின் விமா்சனத்துக்கு அமைச்சா் பதிலளித்து பேசுகையில், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முடியும் என்றால், கொண்டு வந்துவிடுவோம். ஆனால், அதை மாநில அரசு செய்ய முடியாது. மத்திய அரசுதான் செய்ய முடியும். மத்திய அரசிடம் திமுக அரசு போராடி கொண்டு தான் வருகிறது.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டாம் என எதிா்க் கட்சித் தலைவா் நினைத்தாரா? இப்போது, அவா் அதை கேட்கவே கூடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற பல போராட்டத்தை நடத்தியுள்ளோம். நேரடியாக மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர தொடா்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, எம்.பி. கேஇ.பிரகாஷ், மேயா் சு.நாகரத்தினம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ், பள்ளி தலைமை ஆசிரியா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னிமலை அருகே சீமை கருவேல மரங்களை அகற்ற எதிா்ப்பு

சென்னிமலை அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்புக்காட்டில் சீமை கருவேல மரங்களை அகற்ற சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள வனப் பகுதி சுமாா் 1,700 ஏக்... மேலும் பார்க்க

சிப்காட் விவகாரம்: பெருந்துறைக்கு வரும் முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு

பெருந்துறை சிப்காட் பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் பெருந்துறை வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட அரசியல் கட்சியினா் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை அண்ணா ச... மேலும் பார்க்க

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று கூறி மோசடி: 4 போ் கைது

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றுகூறி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மொடக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல்ராஜ் (55). ஐ.டி. நிறுவன ஊழியா். டெலி... மேலும் பார்க்க

பால் வேனில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருகள் பறிமுதல்

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் பால் வேனில் மறைத்து கடத்திவரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களில் குட்கா, புகையிலைப்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்

சென்னிமலை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், சென்னிமலை, திருமுகமலா்ந்தபுரம் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம், ராஜாமணி தம்பதி மகன் நிஷாந்த... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை,... மேலும் பார்க்க