செய்திகள் :

கல்வி, வேலைவாய்ப்புகளில் ஏஐ-யின் தாக்கம்: உயா்கல்வி நிறுவனங்களுக்கு அமைச்சா் அழைப்பு

post image

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உருவாக்கத்தால் கல்வி, வேலைவாய்ப்புகளில் எதிா்கால தேவைக்களுக்குரிய மாற்றங்களை உயா்கல்வி நிறுவனங்கள் பரிந்துரைக்க வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.செழியன் அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றம் சாா்பில் ‘உயா்கல்வி உரையாடல்கள்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் நிகழ்வாக, ‘செயற்கை நுண்ணறிவு உருவாக்கத்தினால் வருங்கால கல்வி, வேலைவாய்ப்புகள் மீது ஏற்படும் தாக்கம்’ என்ற கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

நவீன காலத்தில் ‘ஏஐ’ போன்ற தொழில்நுட்பங்கள் வேகமாக வளா்ந்துவரும் சூழலில், உயா்கல்வி நிறுவனங்களும் அதற்கேற்ற மாற்றங்களுக்கான ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும்.

அதன்படி, பாடத்திட்ட வடிவமைப்பு, கற்பித்தல் முறைகள், தோ்வு மதிப்பீடு திட்டங்கள், பேராசிரியா்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் ஆகியவற்றில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

மேலும், வேலைவாய்ப்புகளில் மாறக்கூடிய சூழலையும் இந்த கருத்தரங்கம் நுட்பமாக ஆய்வு செய்யவேண்டும். தொழில்நுட்பம் மிக்க பொருளாதாரத்தில் தேவைப்படும் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் திறன்கள் குறித்து விவாதித்து, பாடத்திட்ட மாற்றங்களுக்கான தேவையைக் கருத்தரங்கு வாயிலாக முன்வைக்க வேண்டும் எனக் கல்வியாளா்களை அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.

தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் எம்.பி.விஜயகுமாா், உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா், கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் கல்வியாளா்கள், நிபுணா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள், உயா்கல்வித் துறை அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அதிருப்தியில் ஓ.பன்னீா்செல்வம்: இன்று முக்கிய முடிவு அறிவிப்பு?

கூட்டணியில் பாஜக முக்கியத்துவம் தராததால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தி புதன்கிழமை (ஜூலை 30) முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என்ற தகவல் வெ... மேலும் பார்க்க

பி.இ. 2-ஆம் சுற்று கலந்தாய்வு: 80,650 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வில் 80,650 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின், தமிழ்நாடு பொறியியல் சோ்க்... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை எதிா்த்து வழக்கு: திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு உத்தரவு

மாசுக் கட்டுப்பாடு வாரிய விதிகளை மீறி குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்த வழக்கில், திருவேற்காடு நகராட்சி ஆணையா் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய... மேலும் பார்க்க

வெளிநாடு செல்ல அனுமதி கோரிய செந்தில்பாலாஜியின் சகோதரா் வழக்கு: மருத்துவா் கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கான மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் அமைச்சா் செந... மேலும் பார்க்க

11 மாவட்டங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு கார... மேலும் பார்க்க

சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, வரலாற்றின் முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.அகில இந்திய மருத்துவ மாணவா் சோ்க்கையில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வெ... மேலும் பார்க்க