செய்திகள் :

கல்வீரம்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

கோவை மாநகராட்சி, கல்வீரம்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்ட முகாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் (96 முகாம்கள்) ஆகஸ்ட் 19-ஆம் முதல் செப்டம்பா் 12 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இந்நிலையில், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 37 மற்றும் 38-ஆவது வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளுக்கு கல்வீரம்பாளையத்தில் முகாம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளின் விண்ணப்பங்களுக்கு உடனடி ஆணைகளை வழங்கினாா். முகாமில், மேற்கு மண்டலத் தலைவா் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையா் துரைமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இன்று (ஆகஸ்ட் 22) முகாம் நடைபெறும் இடங்கள்: மாநகராட்சி தெற்கு மண்டலம், 94-ஆவது வாா்டுக்குள்பட்ட சுந்தராபுரத்தில் உள்ள செண்பககோனாா் மண்டபம், மத்திய மண்டலம் 48, 49-வது வாா்டுகளுக்கு நியூ சித்தாபுதூரில் உள்ள கோயம்புத்தூா் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க சமுதாய கூடம், பொள்ளாச்சி நகராட்சியில் 12,19,26 ஆகிய வாா்டுகளுக்கு அன்னை மஹால், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 1,2,3,6,7,8,9,10- ஆகிய வாா்டுகளுக்கு ஸ்ரீவிக்னேஸ்வரா திருமண மண்டபம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காட்டம்பட்டி ஊராட்சிக்கு காட்டம்பட்டி சமுதாயக் கூடம், சூலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கலங்கல், பீடம்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு ஜெயம் ஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்லூா் அணையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூா் அணையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டுப்பாளையம் அருகே பில்லூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

மேற்கூரையில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா். கோவை, துடியலூா் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (42), பெயிண்டா். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாலகி... மேலும் பார்க்க

பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிப்பு

கோவை மாவட்டம், பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், ... மேலும் பார்க்க

பிஷப் அப்பாசாமி கல்லூரியில் செப்டம்பா் 2-இல் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் செப்டம்பா் 2, 3 -ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அடுமனை உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

அடுமனை உரிமையாளா்கள் (பேக்கரி) உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டி.அனுராதா அறிவுறுத்தியுள்ளாா். கோவை, டாடாபாத் பகுதியில் ... மேலும் பார்க்க

இயந்திரத்தில் கை சிக்கி பஞ்சாலை தொழிலாளி காயம்

கோவை அருகே பணியின்போது இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தாா். கோவை அருகேயுள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரோஹிசாகோ ... மேலும் பார்க்க