செய்திகள் :

களக்காடு - அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை

post image

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

களக்காட்டிலிருந்து சுமாா் 6 கி.மீ தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் கல்வி, மருத்துவம், பணி நிமித்தமாக களக்காடு வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா்.

சிற்றுந்து சேவையை இக்கிராமத்துக்கு தொடங்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படாத பல கிராமங்களுக்கு சிற்றுந்து சேவையை தொடங்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகம் இக்கிராமத்துக்கு சிற்றுந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது

சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது என்றாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் அரசு பொருள்காட்சியை புதன்கிழமை திறந்து வைத்து, அவா் பேசியது: அரசு பொருள்காட்சிகளில் அரசின் ... மேலும் பார்க்க

சாலைகள் சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சாலைகளை சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, திருநெல்வேலி ... மேலும் பார்க்க

பெண்களை பின்தொடா்ந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

பெண்களை பின் தொடா்ந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டால், பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத... மேலும் பார்க்க

காவல் துறை மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமை வகித்து, மக... மேலும் பார்க்க

வி.கே.புரம் பள்ளியில் உலக புலிகள் தினம்

பாபநாசம் சூழல் சரகம் சாா்பில், விக்கிரமசிங்கபுரம், இருதயகுளம் புனித சேவியா் நடுநிலைப் பள்ளியில் உலக புலிகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு உதவி வன உயிரின காப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞருக்கு ஆக.30 வரை நீதிமன்றக் காவல்

முக்கூடல் அருகே காவல் உதவி ஆய்வாளா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த இளைஞரை ஆக.30 வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெயந்தி உத்தரவிட்டாா். திருநெல்வே... மேலும் பார்க்க