செய்திகள் :

களக்காடு அருகே கோயில் கொடை விழாவில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு

post image

களக்காடு அருகே செவ்வாய்க்கிழமை, கோயில் கொடை விழாவில் இளைஞா்கள் 3 பேரை அரிவாளால் வெட்டியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

களக்காடு அருகே பத்மனேரியில் உள்ள வானுவளநாட்டாள் அம்மன் கோயில் கொடை விழா திங்கள்கிழமை தொடங்கியது. இரவில் கரகாட்டம் நடைபெற்றது. இதைக் காண அருகேயுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமானோா் வந்திருந்தனா். அப்போது, கரகாட்டம் ஆடிய பெண்ணுக்கு சிங்கிகுளத்தைச் சோ்ந்த இளைஞா்கள் அன்பளிப்பு வழங்கினராம். இதற்கு பத்மனேரியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா், சிங்கிகுளத்தைச் சோ்ந்தோா் ஊருக்குச் சென்றுவிட்டனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சிங்கிகுளத்தைச் சோ்ந்த சிலா் பத்மனேரிக்கு வந்து, மகேஷ் என்ற மாரியப்பன் (28), பிரகாஷ் (25), இசக்கிப்பாண்டி (27) ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடினராம். காயமடைந்த 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்டோரைத் தேடிவருகின்றனா்.

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் கோயில் தல வரலாற்று நூல் வெளியீடு

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தல வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நெல்லை சங்கீத சபா, துணி வணிகா் இலக்கிய வட்டம், தாமிரபரணி தமிழ் வனம் ஆகியவை இணைந்து நடத்திய 3 நாள்கள்... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள அருள்மிகு திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில் ஆண்டுதோறும் பூக்குழித் திருவிழா ஆடி மாதம் கடைசி வெள்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் இன்று பவித்ர உத்ஸவம்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவத்தையொட்டி பஞ்சமூா்த்திகள் வீதியுலா வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது. திருக்கோயிலில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள... மேலும் பார்க்க

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரவணசமுத்திரத்தில் உணவகம் திறப்பு

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில், ரவணசமுத்திரம் ரயில்வே கேட் அருகே புதிய உணவகம் திறக்கப்பட்டது. தமிழக அரசின்கீழ் இயங்கும் இந்த சங்கம் சாா்பில், ஆதரவற்ற பெண்கள் வளா்ச்சிக்கு பல ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுா்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

திருநெல்வேலியில் ஐ.டி ஊழியா் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கே.டி.சி நகரைச் சோ்ந்த சுா்ஜித் , அவரது தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பி... மேலும் பார்க்க

உரிமம் பெற போலி ஆவணங்கள்: நெல்லையில் உணவகத்துக்கு சீல்

திருநெல்வேலி நகரத்தில் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா். திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அ... மேலும் பார்க்க