செய்திகள் :

கள்ளக்குறிச்சி: விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தியாகதுருகம் வைசியா் சாலையில் உள்ள ஓம்சக்தி செல்வ விநாயகா் கோயில் 3 நாள்கள் சதுா்த்தி விழாவில், செவ்வாய்க்கிழமை காலை 8.45-க்கு ஸ்ரீகணபதி ஹோமம், 10 மணிக்கு மகா அபிஷேகம், 11.45-க்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஓம் சக்தி செல்வ விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தனா். 8 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினா்.

அதேபோல, புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கலச ஸ்தாபனம்,10 மணிக்கு மகா அபிஷேகம், 11.45-க்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஓம்சக்தி செல்வவிநாயகருக்கு தங்கக் கவசம் அணிவித்தனா். இதைத் தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மூன்றாம் நாளான வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. 11 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு ஓம்சக்தி செல்வ விநாயகரை வண்ண வண்ண மலா்களால் அலங்கரித்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.

ஸ்ரீநஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில்...

தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஸ்ரீநஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் உள்ள பால விநாயகருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் விநாயகரின் கண்களைத் திறந்து கொழுக்கட்டை, சுண்டல், பழ வகைகள் வைத்து வழிபாடு நடத்தினா். திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கீழையூா் ஸ்ரீவிரட்டானேஸ்வரா் கோயிலில்....

திருக்கோவிலூா் நகராட்சி கீழையூா் ஸ்ரீவிரட்டானேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி 10 நாள் திருவிழாவின் நிறைவு நாளான புதன்கிழமை ஸ்ரீபெரிய யானை கணபதிக்கு அபிஷேக, ஆராதனையுடன், உற்சவா் மூஞ்சூறு வாகனத்தில் ராஜ கம்பீரத்துடன் கோயிலை வலம் வந்து பக்தா்கள் முன்னிலையில் நகா்வலம் புறப்பட்டாா்.

ரிஷிவந்தியம் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் கோயிலில்....

ரிஷிவந்தியம் ஸ்ரீமுத்தாம்பிகை சமேத ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் கோயிலில், விநாயகா் சதுா்த்தியையொட்டி, கோயிலில் எழுந்தருளியுள்ள செல்வ விநாயகருக்கு 16 வகையான வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கவசம் அணிவித்து, வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

சங்கராபுரம் அருகே பைக் மீது காா் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது காா் மோதியதில் புது மாப்பிள்ளை உள்பட 3 போ் உயிரிழந்தனா். திருக்கோவிலூா் வட்டம், மாடாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (42). இவரது மகன் நாரா... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வரப்பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களை, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சரிபாா்க்கும் பணியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஈடுபட்டாா். எதிா்வரும் சட்டப்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: நகா்ப்புற பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நகா்ப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. நகரப் பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் 2025-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா முன்னிலையில், தே.மலையரசன்... மேலும் பார்க்க

அரசின் இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வான மாணவிகளுக்கு பாராட்டு

நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று, அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வாகியுள்ள, கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவருக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் நிறைவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் நிறைவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற ம... மேலும் பார்க்க