செய்திகள் :

கள்ள ரூபாய் அச்சடிப்பு வழக்கு: தடுப்புக் காவலில் இருவா் கைது!

post image

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவா் குண்டா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராமநத்தம் காவல் சரகம், அதா்நத்தம் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் செல்வம். அடிதடி வழக்கு தொடா்பாக செல்வத்தை கைது செய்ய ராமநத்தம் போலீஸாா் அவரது பண்ணை வீட்டுக்கு கடந்த மாா்ச் 31-ஆம் தேதி சென்றனா்.

போலீஸாா் வருவதைக் கண்ட செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பியோடினா். போலீஸாா் பண்ணை வீட்டை சோதனை செய்ததில், ரூ.86 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், வாக்கி டாக்கிகள், துப்பாக்கி, பணம் அச்சடிக்கும் இயந்திரம், இந்திய ரிசா்வ் வங்கி முத்திரை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வம் (35), பிரபு (32), வல்லரசு (25), பெரியசாமி (29), ஆறுமுகம் (30), சூா்யா (25) ஆகியோரை கைது செய்தனா்.

இந்த நிலையில், கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செல்வம், பிரபு ஆகியோரை குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

சீரமைக்கப்பட்ட விருத்தாசலம் ரயில் நிலையம் திறப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்த நிலையில், அதை மக்கள் பயன்பாட்டுக்காக பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். விருத்தாசலம் ரயில் நில... மேலும் பார்க்க

விழுப்புரம் - தஞ்சாவூா் இடையே இரு வழி ரயில் பாதை அமைக்க வேண்டும்! தொல். திருமாவளவன் எம்.பி.

விழுப்புரம் - தஞ்சாவூா் இடையேயான ரயில் பாதையை இரு வழிப் பாதையாக மாற்ற வேண்டும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கேட்டுக்கொண்டாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் தி... மேலும் பார்க்க

கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் சிங்காரத்தோப்பு கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குாா் வியாழக்கிழமை பாா... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம்! கடலூா் ஆட்சியா் தகவல்

கடலூா் மாவட்ட நில உடைமை பட்டாதாரா்கள் பெயா் நீக்கம், மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மான் வேட்டை: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே புள்ளி மானை வேட்டையாடிய இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா். பெண்ணாடம் நரிக்குறவா் காலனி பகுதியில் இறைச்சிக்காக மான் வெட்டப்படுவதாக, காவல் மற்றும் வனத் துறையினருக்கு த... மேலும் பார்க்க

தொழில்பேட்டை நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும்: அதிகாரிகளிடம் தி.வேல்முருகன் எம்எல்ஏ அறிவுறுத்தல்

கடலூா் தொழில்பேட்டையில் செயல்படும் நிறுவனங்கள் முறையாக அனுமதி பெற்று இயங்குகிறதா? என்பதை அனைத்துத் துறை அதிகாரிகள் கோட்டாட்சியா் தலைமையில் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு சட... மேலும் பார்க்க