செய்திகள் :

கழிவுநீர்த் தொட்டி தூய்மைப் பணியில் பலியானவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு! உச்ச நீதிமன்றம் கெடு!

post image

கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்தல் குற்றம் என்று அரசு தெரிவித்தாலும், ஆங்காங்கே சிலர் ஈடுபடுத்தப்படுவது இன்றும் நிகழ்கிறது.

இந்த நிலையில் தில்லி நீர் வாரியம், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது, உயிரிழந்தவர்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது, 4 நகரங்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் போதுமானதாகவோ திருப்தியளிப்பதாகவோ இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், அடுத்த முறை தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரமும் முறையாக இல்லையென்றால், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்காக எடுத்துக் கொள்ளும் என்று எச்சரித்தது.

மேலும், கடந்த 3 மாதங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு தொகையை 4 வாரத்துக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையும் படிக்க:தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க

4 நாள் ராணுவ தளபதிகள் மாநாடு: தில்லியில் தொடக்கம்

தில்லியில் 4 நாள்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் ஏப்.1 முதல் ஏப்.4 வரை ராணுவ தளபதிகள் மா... மேலும் பார்க்க